இருசமய விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருசமய விளக்கம் என்னும் நூல் அரிதாசர் என்பவரால் பாடப்பட்டது. சைவம், வைணவம் ஆகிய இரு சமயக் கருத்துகளை விளக்கவந்த நூல் இது. எனினும் இதில் சைவக் கருத்துகள் மறுக்கப்ப்படு வைணவக் கருத்துகள் நிலைநாட்டப்படுகின்றன. [1]

சூழல்
  • கி. பி. 1100-க்குப் பிறகு வைணவ சமயம் மேலோங்கியது.
  • மேலோங்கிய நூல்களில் பெரும்பான்மை மணிப்பிரவாள நடையில் அமைந்தவை.
  • அவை அந்தணர்களால் செய்யப்பட்டவை.
  • அரிதாசர் தமிழில் நூல் செய்தார்.
  • வேளாளர்
நூலைப் பற்றிச் சில குறிப்புகள்
  • இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் கொண்டவை.
  • சிவபுராணக் கருத்துக்கள் மறுக்கப்பட்டுள்ளன.
நூலின் ஓட்டம்
ஆரணவல்லி – திருமால் அடிமை
ஆகமவல்லி – சிவனடிமை
இருவரும் நீராடி மீண்டு இறைவனை வழிபடும்போது உரையாடுவதாக நூல் செல்கிறது.

ஆகமவல்லி பாட்டு

ஆல மரத்தை அடக்கிய வித்தென அண்டமெலாம் எளிதில்
சால அடக்கி அளிப்பவனே திகழ் சந்திர சேகரனே
மால் அயனுக்கும் அனந்த மறைக்கும் நல் வானவருக்கும் எலாம்
மூலம் எனத்தகு காரணனே நம! முக்கண்ணனே நம!

ஆரணவல்லி பாட்டு

அந்தமும் ஆதியும் ஆகிய பேரொளி ஆம் உனை மா மறையால்
முந்து உணர்வோர் சிலர் அல்லது மாறுகொள் மோகன நூல் வழி நீ
தந்த பெருஞ் சமயங்களையே பர தத்துவம் என்று உணர
புந்தி மயக்கிடும் அச்சுதனே! பரிபூரணனே! நமவே!
  • வேத வகைகள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.
  • இந்த நூல் 16ஆம் நூற்றாண்டில் தோன்றியது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருசமய_விளக்கம்&oldid=1420743" இலிருந்து மீள்விக்கப்பட்டது