சேரமான் கோக்கோதை மார்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

சேரமான் கோக்கோதை மார்பன் என்பவன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். பொய்கையார் என்னும் சங்ககாலப் புலவர் இவனைப் பாடியுள்ளார்.[1] இவனது ஊர் தொண்டி. எனவே, இவனைத் தொண்டி அரசன் என ஒருபாடலில் குறிப்பிடுகிறார். இவனை நாடிச் சென்றவர்கள் பிறரை நாடாத அளவுக்குக் கொடை நல்கும் பண்புடையவன் இவன்.[2] மற்றொரு பாடலில் பொறையன் என்பவன் மூவன் என்னும் பகைவனின் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து தன் தொண்டிக் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டான் என்கிறார். இதனால் இவன் கொங்குப் பகுதியாகிய பொறைநாட்டையும் ஆண்ட அரசன் எனத் தெரிகிறது. [3]

இவனது ஊர் ஆறு கடலில் கலக்குமிடத்தில் வளம் மிக்கதாக விளங்கியது. [4]

பிட்டன் இவனது படைத்தலைவனாகவும், சிற்றரசனாகவும் இருந்துகொண்டு குதிரைமலை நாட்டை ஆண்டுவந்தான். [5]

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறம் 48, 49
  2. புறம் 48
  3. புறநானூறு 48, 49, நற்றிணை 18
  4. புறம் 49
  5. புறம் 172