வீ. சாமிக்கண்ணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீ. சாமிக்கண்ணு (பிறப்பு: ஏப்ரல் 21 1940) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் கோலாலம்பூர் மாநகர் மன்றத் துணை கண்காணிப்பாளராக பணியாற்றியவர். கோவி மணாளன், அஞ்சலை மணாளன், இளவாசகன் ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதிவருகின்றார். இவர் சுவாமி இராமதாசரிடம் கவிதை பழகியவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1965 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._சாமிக்கண்ணு&oldid=3229027" இலிருந்து மீள்விக்கப்பட்டது