பரிந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசராட்டிரப் பாண்டியரின் கீழ் வட இலங்கை (நீல நிறம்) கி.பி. 436 - 463
இராசராட்டிரம்
வம்சம் பாண்டியர்
நாடு இராசராட்டிரம்
எல்லை மகாவலி கங்கை ஆறு (தெற்கெல்லை) மற்ற திசைகளில் கடல்
தலைநகரம் அநுராதபுரம்
இராசராட்டிரப் பாண்டியர்களின் பட்டியல்
பாண்டு (பாண்டியன்) பொ.பி. 436 - 441
பரிந்தன் பொ.பி. 441 - 444
இளம் பரிந்தன் பொ.பி. 444 - 460
திரிதரன் பொ.பி. 460
தாட்டியன் பொ.பி. 460 - 463
பிட்டியன் பொ.பி. 463

பரிந்தன் (பொ.பி. 441 - 444) என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்டியர்களுள் இரண்டாமானவன். இவன் பாண்டு (பொ.பி. 436 - 441) என்ற இராசராட்டிரப் பாண்டியர்களுள் முதலமானவனின் மூத்த மகனாவான். இவனுக்குப் பிறகு இவனது தம்பியான இளம் பரிந்தன் (பொ.பி. 444 - 460) இராசராட்டிர அரசை ஆண்டான். இவனது வரலாறு அறியப்படவில்லை ஆயினும் இவன் ஆட்சியில் தாதுசேனன் என்ற உரோகணம் நாட்டு அரசன் இராசராட்டிரத்திற்கு படையெடுத்து வந்தான் என அறிய முடிகிறது.[1]

மூல நூல்கள்[தொகு]

  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
  • சூல வம்சம்

மேற்கோள்கள்[தொகு]

  1. சூல வம்சம், 38ஆம் பரிச்சேதம், 29
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிந்தன்&oldid=3585731" இலிருந்து மீள்விக்கப்பட்டது