பல்லவி அய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்லவி அய்யர் ஒரு இந்தியப் பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் ஆவார். தில்லியில் வளர்ந்த இவர் தில்லியிலும் லண்டனிலும் தன் பட்டப்படிப்பை முடித்தார். சீனாவில் இவர் ஏறத்தாழ 5 ஆண்டு காலம் வசித்திருக்கிறார். தனது அனுபவங்களை சுமோக் அண்ட் மிரர்சு: சீனாவில் ஒர் அனுபவம் (Smoke and Mirrors: An Experience of China) என்ற ஆங்கில நூலாக எழுதியுள்ளார். இதனை சீனா - விலகும் திரை என்ற பெயரில் தமிழில் ராமன் ராஜா மொழி பெயர்த்துள்ளார். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சீனாவைப் பற்றிய பல்வேறு தகவல்களை இந்த நூல் தமிழில் தருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவி_அய்யர்&oldid=2227953" இலிருந்து மீள்விக்கப்பட்டது