திருச்சுழி திருமேனிநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருச்சுழி திருமேனிநாதர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருச்சுழியல்
அமைவிடம்
ஊர்:திருச்சுழி
மாவட்டம்:விருதுநகர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர், பூமீஸ்வரர்
தாயார்:துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை
தல விருட்சம்:அரசு, புன்னை
தீர்த்தம்:பாகவரிநதி (குண்டாறு), கவ்வைக்கடல் (சந்நிதிக்கு எதிரில் உள்ளது.)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

திருச்சுழி திருமேனிநாதர் கோயில் திருச்சுழியல்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை. மேலும் இது ரமண மகரிஷி பிறந்த தலமும் ஆகும்.[1] இந்த ஊரின் முழுப்பெயர் திருச்சுழியல் எனவும் கூறப்படுகிறது.

திருச்சுழியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=308

வெளி இணைப்புக்கள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]