சீ. தம்பிராசா
சீ. தம்பிராசா | |
---|---|
பிறப்பு | 1924 பெரிய கல்லாறு மட்டக்களப்பு |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பண்டிதர் சீ. தம்பிராசா (பிறப்பு: 1924) ஈழத்து தமிழறிஞர். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் “தமிழ் ஒளி” விருது பெற்றவர். பல இலக்கியக் கட்டுரைகளை எழுதியவர். மேடைப் பேச்சாளர்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
பண்டிதர் தம்பிராசா 1924 இல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய கல்லாறு கிராமத்தில் பிறந்தவர். 1951 முதல் 1971 வரையிலான 20 வருடங்கள் இவர் பெரிய கல்லாறு சைவ மகா சபையின் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றியுள்ளார்.
எழுதிய நூல்கள்[தொகு]
- இருபா இருபஃது (1993)
- கதிர்காமம் (2002)
- சங்க இலக்கிய சமுத்திர முத்துக்கள் (2005)
- பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் தோத்திரப் பாடல்கள் (2007)
- கல்லாற்றுக் கடல் நாச்சியார் துதி மலர் (2007)
- பெரிய கல்லாறு மண்டபத்தடிப் பிள்ளையார் ஆலய வரலாறும் திருப்பொன்னூஞ்சலும் (2008)
- எனது இலக்கியச் சிந்தனைகள் (2010)
விருதுகள்[தொகு]
இவரது சமய இலக்கிய பணிகளுக்காகப் பல்வேறு கெளரவங்களும், பரிசுகளும் பாராட்டுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன.
- தமிழ் மறைக் கழகம் நடத்திய “திருக்குறள்” கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு (1962) இதற்கான பரிசளிப்பு விழா 1962, மே 18 இல் வேலணையில் நடைபெற்றது. தில்லியிலிருந்து முனைவர் சாலை இளந்திரையன் பிரதம விருந்தினராகப் பங்குபற்றிய இவ்விழாவில் பண்டிதர் தம்பிராசாவுக்குத் தங்கப்பதக்கம் சூட்டப்பட்டது.
- இந்து சமய கலாசார திணைக்களம் ‘தமிழ் ஒளி’ விருதை இவருக்கு வழங்கியுள்ளது.
வெளி இணைப்புகள்[தொகு]
- வாழும்போதே வாழ்த்துப் பெறும் பண்டிதர் ~தமிழ் ஒளி' தம்பிராசா[தொடர்பிழந்த இணைப்பு], அன்புமணி, தினகரன், அக்டோபர் 10, 2010