தமிழ்நாடு அரசின் ஊனமுற்றோருக்கான திருமணத் திட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு ஊனமுற்றவர்களைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கை, கால் ஊனமுற்றவர்[தொகு]

ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தோரைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்[தொகு]

  1. தம்பதிகளில் ஒருவர் கை, கால் ஊனமுற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. பிறவியிலேயே ஊனமுற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  3. குடும்பத்தின் ஆண்டு வருமானம் 24,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

உதவித்தொகை[தொகு]

  • ரூபாய் 5000 வழங்கப்படும். இதில் ரூபாய் 3000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 2000 காசோலையாகவும் வழங்கப்படும்.

பார்வையற்றவர்[தொகு]

பார்வையற்றவரைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்[தொகு]

  1. தம்பதிகளில் ஒருவர் பார்வையற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. பார்வையற்றவரைத் திருமணம் செய்து கொள்ளும் பார்வையுடையவரின் ஆண்டு வருமானம் 24,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

உதவித்தொகை[தொகு]

  • ரூபாய் 10000 வழங்கப்படும். இதில் ரூபாய் 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3000 ரொக்கமாகவும் வழங்கப்படும்.

பேசும் திறனற்ற காது கேளாதவர்[தொகு]

பேசும்திறனற்ற காது கேளாதவர்களைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்[தொகு]

  1. திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் 100 சதவிகிதம் பேசும் திறனற்று காதுகேளாதவராக இருத்தல் வேண்டும்.
  2. 35 வயதுக்கு மேற்படாதவர்களுக்கு வருமான வரம்பு எதுவுமில்லை.

உதவித்தொகை[தொகு]

  • ரூபாய் 5000 வழங்கப்படும். இதில் ரூபாய் 3000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 2000 ரொக்கமாகவும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க[தொகு]

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மறுவாழ்வு அலுவலர் அலுவலகத்தில் தேவையான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று நிரப்பி, தேவையான இணைப்புகளைச் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் இந்த விண்ணப்பப் படிவங்களை ஆய்வு செய்து குறிப்பிட்ட உதவித்தொகைகளை வழங்குகிறார்.