கு. ப. சேது அம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கு. ப. சேது அம்மாள் (1908 - நவம்பர் 5, 2002) ஒரு தமிழ் எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலனின் தங்கை.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சேது அம்மாளின் முதல் சிறுகதை “செவ்வாய் தோஷம்” 1939 இல் காந்தி இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகத் தொடங்கின. 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு இவரது நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

படைப்புகள்[தொகு]

புதினங்கள்[தொகு]

  • மைதிலி
  • உஷா
  • தனி வழியே
  • ஓட்டமும் நடையும்
  • அம்பிகா
  • கல்பனா
  • குரலும் பதிலும்
  • உண்மையின் உள்ளம்
  • வள்ளியின் உள்ளம் (1961)

சிறுகதைத் தொகுதிகள்[தொகு]

  • தெய்வத்தின் பரிசு
  • வீர வனிதை
  • உயிரின் அழைப்பு
  • ஒளி உதயம்

அபுனைவு நூல்கள்[தொகு]

  • சமையற்கலை (இருபாகங்கள்)
  • பாரதப்பெண்
  • போதி மாதவன் (புத்தர் வரலாறு)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._ப._சேது_அம்மாள்&oldid=3356014" இலிருந்து மீள்விக்கப்பட்டது