பேச்சு:ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கத்தை நிறுவியவரின் பெயர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ஆவார்.இவர் எம்.பி.பி.எஸ்.முடித்தவர்.இந்துக்களிடையே இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து,ஒன்றுபட்ட இந்து சமுதாயத்தை உருவாக்கிடவே ஆர்.எஸ்.எஸ்.ஸை உருவாக்கினார்.இந்த இயக்கத்தை உருவாக்கிட இவருக்கு மூன்று ஆண்டுகளாக சிந்தனை செய்தார்.பல தேசபக்தர்களிடம் கலந்துரையாடியபின்னரே ஆர்.எஸ்.எஸ்.ஸை உருவாக்கினார்.இன்று 1947க்கு முன்பாக,ஆங்கிலேயன் இந்தியாவை ஆள்கிறான்;இவனை நாம் எப்படியாவது வெளியேற்றிவிடலாம்.ஆனால்,2000 மைல்கள் சதுர பரப்பளவும்,ஏராளமான வீரர்களும்,மன்னர்களும் வாழ்ந்த இந்த இந்து நாட்டினை எப்படி வெறும் 200 ஆங்கிலேய வியாபாரிகளால் கைப்பற்ற முடிந்தது? என்ற சிந்தனையே இவரது மனதில் உதித்தது.இந்த சிந்தனையோடு பலரை ,பலமுறை கலந்து ஆலோசித்தபின்னரே, இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்துதர்மத்தின் பெருமைகளை அறிய வேண்டும்.அப்படி செய்தால் மட்டுமே இந்துதேசம் காலம் காலமாக நிம்மதியாகவும்,வலிமையாகவும் இருக்கும்;அதற்கு ஒரு நிரந்தரமான அமைப்பு தேவை என்ற எண்ணத்தின் வெளிப்பாடே ஆர்.எஸ்.எஸ். வெளியில் இருந்து பார்த்தால்,ஆர்.எஸ்.எஸ்.ஒரு தீவிரவாத இயக்கமாகத்தான் தெரியும்.ஏன் எனில்,பத்திரிகைகளில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கம்யூனிஸ்டுகள்.அவர்களை கொள்கையோடு எதிர்கொள்வது ஆர்.எஸ்.எஸ்.மட்டுமே.காங்கிரஸீக்கு எங்கே ஆர்.எஸ்.எஸ்.ஆட்சியைப் பிடித்துவிடுமோ என்ற பயத்தினால் ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பார்த்து பயம்.அதனால்தான் கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்தவர் என பொய்ப் பிரச்சாரம் செய்தது.ஆனால்,நீதிமன்றத்தீர்ப்போ காந்தியை சுட்டுக்கொன்ற சதியில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பங்கு சிறிது கூட இல்லை என கூறிவிட்டது.

சான்றுகள் சம்மந்தமாக....[தொகு]

சான்றுகள் எப்போது சமர்ப்பிக்கப்பட்டு இக்கட்டுரை மேம்படுத்தப்படும்.. அல்லது அழிக்கப்படும்.....