சனவரி 2009 முல்லைத்தீவு பொதுமக்கள் படுகொலைகள்
சனவரி 2009 ஆம் ஆண்டில் இலங்கைத் தரைப்படை எறிகணை, வானூர்தித் தாக்குதல், நேரடித் தாக்குதல் மூலம் பல நூறு தமிழ்ப் பொதுமக்களை முல்லைத்தீவில் படுகொலை செய்தது.
பெப்ரவரி 3[தொகு]
50 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களும், 10 ஆயிரம் வரையான ஏற்கெனவே குடியிருந்த மக்களும் வாழ்ந்து வந்த சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை வரை சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேர் காயமடைந்தனர்.[1]
சனவரி 29[தொகு]
சனவரி 29, 50 மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு, பல நூறு பேர்கள் காயமடைந்தனர்.[2]
சனவரி 26[தொகு]
சனவரி 26 மட்டும் 300 பேர் பாதுகாப்பு வலையம் என இலங்கை அரசால் அறிவிக்கபட்ட பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்காண மக்கள் காயம் அடைந்தனர்.[3]
தொடர்ந்து மூர்க்கமான போரை எதிர்நோக்கிய மக்கள் உணவு, மருந்து, தங்குமிடம் இல்லாமல் இன்னல்களை எதிர்நோக்கினர்.
விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டு[தொகு]
மனித உரிமைகள் கண்காணிப்பகம் மக்களை சுதந்திரமாக வெளியேற விடவில்லை என குற்றம்சாட்டியது. இலங்கைத் தரைப்படை புலிகள் மக்களை மனித கவசமாக பாவிப்பதாக குற்றம் சாட்டியது.
இவற்றையும் பாக்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ நாளாந்தம் 5,000 வரையான பீரங்கிக் குண்டுகள்; புதுவகை எரிகுண்டுகள்; செவ்வாய் மட்டும் வன்னியில் 58 தமிழர்கள் படுகொலை
- ↑ Artillery barrage kills 44 civilians, 178 wounded in 'safety zone'
- ↑ Monday, 26 January 2009. More than 300 civilians feared killed, people bleed to death on streets. தமிழ்நெற் [1]