பரோட்டா
புரோட்டா & முட்டை மசாலா குருமா | |
வகை | உரொட்டி |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியத் துணைக்கண்டம் |
பகுதி | தென்னிந்தியா and இலங்கை |
முக்கிய சேர்பொருட்கள் | மைதா, eggs, நெய் or oil |
பரோட்டா அல்லது புரோட்டா (Parotta or Puratha) என்பது மைதாமாவால் செய்யப்படும் உணவாகும். இது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், நேபாளம், பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப்படுகிறது. பராத்தா என்கிற வார்த்தை சமஸ்கிருதச் சொல்லாகும்.[1] இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
வகைகள்[தொகு]
- புரோட்டா
- கொத்து புரோட்டா (முட்டை புரோட்டா)
- வீச் புரோட்டா
- முட்டை வீச் புரோட்டா
- லாப்பா புரோட்டா
- முட்டை லாப்பா புரோட்டா
- சிக்கன் லாப்பா புரோட்டா
- சில்லி புரோட்டா
- கோதுமை புரோட்டா
- பன் புரோட்டா (தடிமன் ரொட்டி)
- விருதுநகர் எண்ணெய் புரோட்டா
- தூத்துக்குடி பொறித்த புரோட்டா
தேவையான பொருட்கள்[தொகு]
- மைதா மாவு அல்லது கோதுமை மாவு (கோதுமை புரோட்டா செய்முறையில்)
- உப்பு (தேவையான அளவு)
- எண்ணெய் (தேவையான அளவு)
- முட்டை அல்லது ஈஸ்ட் (சைவ முறையில்) (தேவையான அளவு)
- தண்ணீர் (தேவையான அளவு)
செயல்முறை[தொகு]
- மைதா மாவை பாத்திரத்தில் கொட்டி சிறிது தண்ணீர் விட்டும் பின் எண்ணெய் விட்டும் பிசைந்து, மிருதுவான பின்னர் சிறு உருண்டைகளாக பிசைந்த மாவை உருட்ட வேண்டும். உருண்டையை உருட்டும் கட்டையின் உதவியோடு, பெரிய வட்டமாக உருட்டி, அதனை மடித்து, அதனை அழுத்தி சிறிது வட்டமாக மாற்றவும். பின்னர் தோசைக்கல்லில் இட்டு சந்தன நிறத்தில் மாறியவுடன் எடுத்தால் பரோட்டா தயாராகி விடும்.
- மைதாவில் முதலில் தேவையான அளவு உப்பு போட்டு, 5 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி்ப் பிசைந்து தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும்.
- இதை 4 மணி நேரம் ஊறவிடவும்.
- பின் உருண்டைகளாக செய்து எல்லா உருண்டைகள் மீதும் 3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் தடவி, ஒரு வெள்ளைத்துணியை தண்ணீரில் நனைத்து அதன் மீது போட்டு மூடிவைக்கவும்.
- பின் கால் மணி நேரம் கழித்து அகலமான பரோட்டா பலகையில் சிறிது எண்ணெய் தடவி ஒரு உருண்டையை எடுத்து வளர்த்து இருபக்கமும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடித்துக்கொண்டு வட்டமாக செய்துக்கொள்ளவும். இவ்வாறு எல்லா உருண்டைகளையும் செய்துவைத்து அதன்மேல் திரும்பவும் ஈரத்துணியை போட்டுவைக்கவும்.
- பின் கால்மணி நேரம் கழித்து அடுப்பில் தவாவை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி ஒவ்வொரு உருண்டைகளையும் கைவிரல்களால் தட்டி எண்ணெயில் போட்டு இருபக்கமும் சிவக்க பொரித்து எடுக்கவும்.
உடன் பரிமாறுவை[தொகு]
- சைவ குருமா (சால்னா)
- அசைவ குருமா (சால்னா)
- முட்டை குருமா
- கொத்து கறி
சிக்கல்கள்[தொகு]
மைதா மாவைச் சுத்திகரிக்க பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) எனும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கான ஒன்றாகும். அது மட்டுமல்ல, நீரிழிவு (சர்க்கரை) நோய் வர வாய்ப்புகள் அதிகம்.[சான்று தேவை] இவற்றை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன.[2] புரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
படத்தொகுப்பு[தொகு]
-
மைதா மாவை உருண்டைகளாக்குதல்
-
உருண்டைகளை ஊறவைத்தல்
-
தயாரான உருண்டைகள்
-
விசிறியாக அடித்து வட்டமாகச் சுற்றப்பட்ட மைதா மாவு
-
வேக வைக்கப்படும் பரோட்டா
-
தந்தூரி பரோட்டா
-
பரோட்டா
-
கொத்து பரோட்டா கோழிக்கறியுடன்.
-
தூத்துக்குடி பொறித்த புரோட்டா
-
எண்ணெய்சட்டியில் இடப்படும் தூத்துக்குடி பொறித்த புரோட்டா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "கொத்து, வீச்சு, சில்லி... பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்! #HealthAlert". விகடன் இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2017.
- ↑ "கொத்து, வீச்சு, சில்லி... பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்! #HealthAlert". விகடன் இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2017.