மன்மோகன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்மோகன் சிங்
ਮਨਮੋਹਨ ਸਿੰਘ
Portrait of Manmohan Singh
13வது இந்தியப் பிரதமர்
பதவியில்
22 மே 2004 – 26 மே 2014
குடியரசுத் தலைவர்அப்துல் கலாம்
பிரதீபா பாட்டீல்
பிரணாப் முகர்ஜி
முன்னையவர்அடல் பிகாரி வாச்பாய்
பின்னவர்நரேந்திர மோதி
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்
பதவியில்
6 நவம்பர் 2005 – 24 அக்டோபர்2006
முன்னையவர்நட்வர் சிங்
பின்னவர்பிரனாப் முகர்ஜி
இந்தியாவின் நிதியமைச்சர்
பதவியில்
30 நவம்பர் 2008 – 24 சனவரி 2009
முன்னையவர்பழனியப்பன் சிதம்பரம்
பின்னவர்பிரனாப் முகர்ஜி
பதவியில்
21 சூன் 1991 – 16 மே 1996
பிரதமர்நரசிம்ம ராவ்
முன்னையவர்மது தண்டவதே
பின்னவர்ஜஸ்வந்த் சிங்
இந்தியத் திட்டக் குழுவின் துணைத் தலைவர்
பதவியில்
15 சனவரி 1985 – 31 ஆகத்து 1987
பிரதமர்ராஜீவ் காந்தி
முன்னையவர்நரசிம்ம ராவ்
பின்னவர்சிவ் சங்கர்
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர்
பதவியில்
15 செப்டம்பர் 1982 – 15 சனவரி 1985
முன்னையவர்இந்திரபிரசாத் கோர்தன்பாய் பட்டேல்
பின்னவர்அமிதவ் கோசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 செப்டம்பர் 1932 (1932-09-26) (அகவை 91)
கா, பஞ்சாப்,பிரித்தானிய ராஜ்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1982–தற்போது வரை)
துணைவர்குர்சகாரன் கெளர் (திருமணம். 1958)
பிள்ளைகள்உபிந்தர் சிங்
தமன் சிங்
அம்ரித் சிங்
வாழிடம்(s)7 ரேஸ் கோர்ஸ் வீதி, புது தில்லி, இந்தியா (official)
குவாகாத்தி (private)
முன்னாள் கல்லூரிபஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிச்சு
நியூபீல்ட் கல்லூரி, ஆக்சுபோர்டு
வேலைபொருளாதார நிபுனர்
குடிமைப் பணி
சமூக சேவையாளர்
பேராசிரியர்
கல்வியாளர்
இணையத்தளம்மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இவர், இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார்.

1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.

மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 மற்றும் 2007ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மன்மோகன் சிங் கா, பஞ்சாப், பிரித்தானியாவின் இந்தியாவில் ஒரு சீக்கிய குடும்பத்தில் 26 செப்டம்பர் 1932 அன்று குர்முக் சிங் மற்றும் அம்ரித் கவுர் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் மிக இளம் வயதிலேயே தனது தாயை இழந்தார்.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் அம்ரித்சர், இந்தியாவில் குடிப்பெயர்ந்தனர். இவர் அங்குள்ள இந்துக் கல்லூரியில் பயின்றார். இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர்.

பணி அனுபவம்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
இந்திரபிரசாத் கோர்தன்பாய் பட்டேல்
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
1982–1985
பின்னர்
அமித்தாவ் கோஷ்
முன்னர்
பி. வி. நரசிம்ம ராவ்
திட்டக் குழு துணைத்தளைவர்
1985–1987
பின்னர்
சிவ் சங்கர்
முன்னர்
யஷ்வந்த் சின்கா
இந்தியாவின் நிதியமைச்சர்
1991–1996
பின்னர்
ஜஸ்வந்த் சிங்
முன்னர்
அடல் பிகாரி வாச்பாய்
இந்தியப் பிரதமர்
2004–2014
பின்னர்
நரேந்திர மோதி
திட்டக் குழு தலைவர்
2004–2014
முன்னர்
நட்வர் சிங்
வெளிவிவகாரத் துறை அமைச்சர்
2005–2006
பின்னர்
பிரணப் முக்கர்ஜி
முன்னர்
ப. சிதம்பரம்
இந்தியாவின் நிதியமைச்சர்
2008–2009
முன்னர்
பிரணப் முக்கர்ஜி
இந்தியாவின் நிதியமைச்சர்
2012
பின்னர்
ப. சிதம்பரம்

அரசியல்[தொகு]

  • இவர் 1982 முதலே இந்திய ரிசர்வ் வங்கி மேலாளராக பொறுப்பில் இருந்த போதே அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவியும், இந்திய பிரதமருமான இந்திரா காந்தி காலகட்டத்திலே காங்கிரஸ் கட்சியில் திட்ட ஆலோசகராகவும், காங்கிரஸ் கட்சியின் முன்னேற்றத்திற்கு சிறந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டதை தொடர்ந்து மன்மோகன் சிங் பிரதமர் இந்திரா காந்தியின் அபிமானம் பெற்ற நம்பிக்கையான நபராக உருவானார்.
  • பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் கட்சியின் நம்பிக்கை பெற்ற சகாக்களில் ஒருவரானார்.
  • மேலும் காங்கிரஸ் கட்சியில் (1982–1991) வரை காலகட்டத்தில் ராஜ்ய சபா உறுப்பினராகவே தொடர்ந்தார்.
  • மேலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சந்திரசேகர், நரசிம்ம ராவ் போன்ற பிரதமர் மந்திரிகளின் அமைச்சரவையில் பல ஆலோசனை வழங்கும் திட்டக்குழு தலைவராகவும் செயல்பட்டார்.
  • மேலும் 1991ல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் இந்திய பொருளாதார பெரும் பின்னடைவில் இருந்த போது இந்தியாவில் அதுவரை இல்லாத விலையேற்றம் போன்ற சிக்கல்களில் இருந்து மீட்டெடுத்ததே அன்றைய இந்திய நிதித்துறை அமைச்சரவையில் இருந்த திரு. மன்மோகன் சிங் தான் என்பதை யாராலும் மறக்க முடியாது.
  • மேலும் அப்போது பிரதமர் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக யாரை நியமிக்கலாம் என்று அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்களிடம் கலந்து ஆலோசனை கேட்ட போது கூட்டணி கட்சிகளில் ஒன்றான தமிழகத்தை சேர்ந்த அன்றைய அதிமுக கட்சியின் தலைவியும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் மன்மோகன் சிங் என்ற பெயரை பரிந்துரை செய்தார்.
  • மேலும் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இல்லாத போதிலும் சிறந்த எதிர்கட்சி தலைவராகவே செயல்பட்டு உள்ளார்.
  • பின்பு காங்கிரஸ் கட்சியின் (1991-1996) ஆட்சி காலத்தில் பிரதமர் நரசிம்ம ராவுக்கு மிகவும் பக்கபலமாக இருந்து இந்திய பொருளாதார சிக்கலை மேம்படுத்தியதில் மன்மோகன் சிங்க்கு பெரும் பங்கு உண்டு. இதனாலே அக்காலகட்டத்தில் நரசிம்ம ராவ்வின் நம்பிக்கை பெற்றவரில் ஒருவராக திகழ்ந்தார்.
  • பிறகு 2004, 2009 ஆகிய இரண்டு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற போதிலும் பிரதமராக திகழ்ந்த மன்மோகன் சிங் அவர்கள் தனது ஆளுமையை நேரடியாக செலுத்த முடியாமல் போனதற்கு காரணமே அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியாலே முறியடிக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்மோகன்_சிங்&oldid=3925509" இலிருந்து மீள்விக்கப்பட்டது