தினாநாத் கோபால் டெண்டுல்கர்
தினாநாத் கோபால் டெண்டுல்கர் என்பவர் இந்திய எழுத்தாளரும், ஆவணத் திரைப்பட இயக்குநரும் நூலாசிரியரும் ஆவார். எட்டு தொகுப்புகளைக் கொண்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கைப் பற்றிய நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இவர் மகாராஷ்டிராவில் உள்ள இரத்தினகிரியில் பிறந்தவர். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது; ஆனால் அதனை ஏற்க மறுத்தார். பத்ம பூசண் விருதுக்குப் பதிலாக ஒரு கைக்கடிகாரத்தை வழங்குமாறு வேண்டினார்.[1]
ஆக்கங்கள்[தொகு]
இவர் கீழ்க்கண்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
- மகாத்மா: லைப் ஆப் மோகந்தாசு கரம்சந்து காந்தி
- ரசியாவில் 30 மாதங்கள்
- பெயித் இசு எ பேட்டில் (கான் அப்துல் கப்பார் கான் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு)
- சவகர்லால் நேரு இன் பிக்சர்சு
- காந்தி இன் சம்பரன்
- சோவியத் சம்சுகிருதி
- காந்தி: அவரது வாழ்க்கையும், ஆக்கங்களும்
சான்றுகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-29. பார்க்கப்பட்ட நாள் 2017-06-18.