எலினா கார்னரோ பிசுகோபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலினா கார்னரோ பிசுகோபியா
Elena Cornaro Piscopia
பிறப்பு(1646-06-05)சூன் 5, 1646
பலாசோ லோரிடான், வெனிசு
இறப்புசூலை 26, 1684(1684-07-26) (அகவை 38)
பதுவா
கல்லறைசாந்தா கியசுதினா திருச்சபை
தேசியம்இத்தாலியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பதுவா பல்கலைக்கழகம்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • லோரா பாசி

எலினா கார்னரோ பிசுகோபியா (Elena Cornaro Piscopia; 5 சூன் 1646 – 26 சூலை 1684) ஓர் இத்தாலிய மெய்யியலாளர். இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி.

இவர்தான் உயர்கல்விப் பட்டம்பெற்ற முதல் பெண்மணி ஆவார். சில முன்னெடுத்துக்காட்டுகளாக பீட்ரிசு கலின்டோ, யூலியானா மோரெல் ஆகியோரைக் கூறலாம்.[1] இக்காலத்தில் முனைவர் பட்டம்பெற்ற சிலராக கணிதவியலாளர் சோஃபியா கோவலெவ்சுகாயா, வரலாற்றியலாளர் சுடெபானியா வோலிக்கா ஆகியோரைக் கூறலாம். இவர்கள் இருவரும் 1875இல் பட்டம் பெற்றனர்.[2]

எலினா ஒரு சிறந்த இசைக் கலைஞர். இசைப் பற்றிய அக்கால மரபின் முழுப் பலமையையும் பெற்றுத் திகழ்ந்தார். இவர் கிளாவேசீன், கிளாவிகோர்டு ஆகியவற்றிலும் யாழ், வயலின் ஆகிய அனைத்திலும் வல்லமை பெற்றிருந்தார். வாழ்நாள் முழுவதிலும் அவற்றைப் பயன்கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Paul F. Grendler (1988). John W. O'Malley. ed. Schools, Seminaries, and Catechetical Instruction, in Catholicism in Early Modern History 1500-1700: A Guide to Research. Center for Information Research. பக். 328. 
  2. Schwartz, Agata (2008). Shifting Voices: Feminist Thought and Women's Writing in Fin-de-siècle Austria and Hungary. McGill-Queen's Press - MQUP. பக். 248. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780773532861. 

வெளி இணைப்புகள்[தொகு]