1 சாமுவேல் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாவீது கோலியாத்தின் தலையைக் கொய்தல் (1 சாமு 17:41-54). ஓவியர்: கார்லோ டோல்சி (1616-1686). காப்பகம்: பாஸ்டன்.
விவிலிய
நூல்கள்
பழைய ஏற்பாடு
தொடக்க நூல்
விடுதலைப் பயணம்
லேவியர்
எண்ணிக்கை
இணைச் சட்டம்
யோசுவா
நீதித் தலைவர்கள்
ரூத்து
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 அரசர்கள்
2 அரசர்கள்
1 குறிப்பேடு
2 குறிப்பேடு
எஸ்ரா
நெகேமியா
எஸ்தர்
யோபு
திருப்பாடல்கள்
நீதிமொழிகள்
சபை உரையாளர்
இனிமைமிகு பாடல்
எசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஒசேயா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீக்கா
நாகூம்
அபக்கூக்கு
செப்பனியா
ஆகாய்
செக்கரியா
மலாக்கி
இணைத் திருமுறை
தோபித்து
யூதித்து
எஸ்தர் (கி)
சாலமோனின் ஞானம்
சீராக்கின் ஞானம்
பாரூக்கு
தானியேல் (இ)
1 மக்கபேயர்
2 மக்கபேயர் தொகு

1 சாமுவேல் (1 Samuel) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதைத் தொடர்ந்து வரும் 2 சாமுவேல் இந்நூல் கூறும் வரலாற்றின் தொடர்ச்சியாக உள்ளது.

நூல் பெயரும் உள்ளடக்கமும் [தொகு]

"1 & 2 சாமுவேல்" என்னும் நூல்களில் இசுரயேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. இவ்விரு நூல்களின் தொகுப்பு எபிரேய மூல மொழியில் "Sefer Sh'muel" (= சாமுவேலின் நூல்கள்) என்று அழைக்கப்படுகிறது.

நீதித் தலைவர்களின் காலம் அரசுரிமையின் காலமாக மாறியது குறித்த நிகழ்ச்சிகள் "1 சாமுவேல்" என்னும் நூலில் இடம் பெறுகின்றன. மேலும், நீதித் தலைவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவரான சாமுவேல், இசுரயேலின் முதல் அரசரான சவுல், சிறுபருவத்தே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இசுரயேலின் பேரரசராக உயர்த்தப்பட்ட தாவீது ஆகிய மூவரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சமுதாய மாற்றமும் இந்நூலில் இடம்பெறுகிறது.

கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் இருந்தபோது வெற்றியும், அவருக்கு உண்மையற்றவர்களாய் நடக்கும்போது அழிவும் ஏற்படும் என்னும் கருத்து இந்நூலில் தெளிவாக்கப்படுகிறது. ஆண்டவரே இசுரயேலின் உண்மையான அரசர் என்று கருதப்பட்டார். ஆனால், மக்களின் விருப்பத்திற்கு இணங்கி அவர் அவர்களுக்கு ஓர் அரசரைத் தேர்ந்தெடுக்கிறார். ஆயினும் அரசரும் இசுரயேல் மக்களும் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் என்பதும், செல்வர் வறியோர் ஆகிய எல்லா மக்களின் உரிமைகளும் கடவுளின் திருச்சட்டத்தின் கீழ் சமமாகக் காக்கப்பட வேண்டும் என்பதும் இந்நூலில் வலியுறுத்தப்படுகின்றன.

நூலின் பிரிவுகள் [தொகு]

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. இசுரயேலின் தலைவர் சாமுவேல் 1:1 - 7:17 411 - 422
2. சவுல் அரசராதல் 8:1 - 10:27 422 - 426
3. சவுல் ஆட்சியின் முற்பகுதி 11:1 - 15:35 426 - 435
4. தாவீதும் சவுலும் 16:1 - 30:11 436 - 462
5. சவுல், அவர்தம் புதல்வர்கள் ஆகியோரின் இறப்பு 31:1-13 462

மேலும் காண்க [தொகு]

விக்கிமூலத்தில் சாமுவேல் - முதல் நூல்

"http://ta.wikipedia.org/w/index.php?title=1_சாமுவேல்_(நூல்)&oldid=1357274" இருந்து மீள்விக்கப்பட்டது