1833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1800கள் 1810கள் 1820கள் - 1830கள் - 1840கள் 1850கள் 1860கள் |
| ஆண்டுகள்: | 1830 1831 1832 - 1833 - 1834 1835 1836 |
| 1833 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1833 MDCCCXXXIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1864 |
| சீன நாட்காட்டி | 4529-4530 |
| எபிரேய நாட்காட்டி | 5592-5593 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1888-1889 1755-1756 4934-4935 |
| இரானிய நாட்காட்டி | 1211-1212 |
| இஸ்லாமிய நாட்காட்டி | 1253-1254 |
| ரூனிக் நாட்காட்டி | 2083
|
ரஷ்ய ஓவியர் கார்ல் பிரியூலொவ்வின் பொம்பெய்யின் கடைசி நாள் ஓவியம் 1833 இல் ரோமில் முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
1833 (MDCCCXXXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 23 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.
- மார்ச் 3 - அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.
- ஆகஸ்ட் - பிரித்தானியாவின் நாடாளுமன்றம் பிரித்தானியப் பேரரசில் உள்ள அனைத்து அடிமைகளுக்கும் விடுதலையை அறிவித்தது.
- ஆகஸ்ட் 12 - சிக்காகோ ந்கரம் உருவாக்கப்பட்டது.
- செப்டம்பர் 29 - மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.
- நவம்பர் 12-13 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் (Leonid meteor) வீழ்ந்தன.
- நவம்பர் 25 - சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.
[தொகு] தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- முதலாவது நொதியம் கண்டுபிடிக்கப்பட்டது.
- சியாமின் இளவரசர் மொங்கூட் தம்மாயுத பௌத்தம் என்ற பிரிவை ஆரம்பித்தார்.
- இலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது (1833)
- இலங்கையில் அமெரிக்க மிஷனின் மீது விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டது.
- இலங்கையின் முதலாவது குழந்தைகள் பள்ளி யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த எக்கார்ட் என்ற பெண்மணியினால் ஆரம்பிக்கப்பட்டது.
- இலங்கையில் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- அக்டோபர் 31 - அல்பிரட் நோபல், நோபல் பரிசை உருவாக்கிய சுவீடன் அறிவியலாளர் (இ. 1896)
- பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், ஜெர்மனிய புவியியலாளர் (இ. 1905)

