1833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1800கள் 1810கள் 1820கள் - 1830கள் - 1840கள் 1850கள் 1860கள் |
| ஆண்டுகள்: | 1830 1831 1832 - 1833 - 1834 1835 1836 |
| 1833 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1833 MDCCCXXXIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1864 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2586 |
| சீன நாட்காட்டி | 4529-4530 |
| எபிரேய நாட்காட்டி | 5592-5593 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1888-1889 1755-1756 4934-4935 |
| இரானிய நாட்காட்டி | 1211-1212 |
| இசுலாமிய நாட்காட்டி | 1248 – 1249 |
| ரூனிக் நாட்காட்டி | 2083
|
1833 (MDCCCXXXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 23 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.
- மார்ச் 3 - அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.
- ஆகஸ்ட் - பிரித்தானியாவின் நாடாளுமன்றம் பிரித்தானியப் பேரரசில் உள்ள அனைத்து அடிமைகளுக்கும் விடுதலையை அறிவித்தது.
- ஆகஸ்ட் 12 - சிக்காகோ ந்கரம் உருவாக்கப்பட்டது.
- செப்டம்பர் 29 - மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.
- நவம்பர் 12-13 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் (Leonid meteor) வீழ்ந்தன.
- நவம்பர் 25 - சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷ்ய ஓவியர் கார்ல் பிரியூலொவ்வின் பொம்பெய்யின் கடைசி நாள் ஓவியம் 1833 இல் ரோமில் முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்[தொகு]
- முதலாவது நொதியம் கண்டுபிடிக்கப்பட்டது.
- சியாமின் இளவரசர் மொங்கூட் தம்மாயுத பௌத்தம் என்ற பிரிவை ஆரம்பித்தார்.
- இலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது (1833)
- இலங்கையில் அமெரிக்க மிஷனின் மீது விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டது.
- இலங்கையின் முதலாவது குழந்தைகள் பள்ளி யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த எக்கார்ட் என்ற பெண்மணியினால் ஆரம்பிக்கப்பட்டது.
- இலங்கையில் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட்டது.
பிறப்புக்கள்[தொகு]
- அக்டோபர் 31 - அல்பிரட் நோபல், நோபல் பரிசை உருவாக்கிய சுவீடன் அறிவியலாளர் (இ. 1896)
- பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், ஜெர்மனிய புவியியலாளர் (இ. 1905)