1829
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1790கள் 1800கள் 1810கள் - 1820கள் - 1830கள் 1840கள் 1850கள் |
| ஆண்டுகள்: | 1826 1827 1828 - 1829 - 1830 1831 1832 |
| 1829 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1829 MDCCCXXIX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1860 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2582 |
| சீன நாட்காட்டி | 4525-4526 |
| எபிரேய நாட்காட்டி | 5588-5589 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1884-1885 1751-1752 4930-4931 |
| இரானிய நாட்காட்டி | 1207-1208 |
| இசுலாமிய நாட்காட்டி | 1244 – 1245 |
| ரூனிக் நாட்காட்டி | 2079
|
1829 ((MDCCCXXIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்).
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மார்ச் 22 - ஒட்டோமான் பேரரசிடம் இருந்து கிரேக்கம் விடுதலை பெற்றது. கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன.
- மார்ச் 31 - எட்டாம் பயஸ் 253வது போப்பாண்டவர் ஆனார்.
- ஏப்ரல் 13 - பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு மத உரிமை அளித்தது.
- ஏப்ரல் 25 - மேற்கு அவுஸ்திரேலியாவில் சார்ல்ஸ் ஃபிரெமாண்டில் சலேஞ்சர் என்ற கப்பலில் வந்து தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
- மே 6 - அக்கார்டியன் இசைக்கருவிக்கு சிரில் டாமியன் காப்புரிமம் கோரினார். மே 23 இல் காப்புரிமம் தரப்பட்டது.
- சூன் 3 - மேற்கு ஆஸ்திரேலியாவில் சுவான் ஆற்றுக் குடியேற்றத் திட்டம் (பின்னர் இது பேர்த், பிரீமெண்டில்]]) ஆரம்பிக்கப்பட்டது.
- சூலை 23 - ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- செப்டம்பர் 14 - ஒட்டோமான் பேரரசு ரஷ்யாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. ரஷ்ய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.
- டிசம்பர் 4 - இந்தியாவில் உடன்கட்டை ஏறல் சடங்கு ஆங்கிலேயர் ஆட்சியில் சட்டத்துக்கு எதிரானதாக ஆக்கப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- செப்டம்பர் 3 - அடோல்ஃப் ஃபிக், ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் (இ. 1901)
- சைகுத் தம்பி ஞானியார் சாஹிப், சூபிக் கலைஞர் (இ. 1888)
இறப்புக்கள் [தொகு]
- பாடுவார் முத்தப்பர், சிற்றிலக்கியப் புலவர் (பி. 1767)
- பெப்ரவரி 21 - ராணி சென்னம்மா, இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1778)