ஹந்தனை மலைத்தொடர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹந்தனை பாதுகாக்கப்பட்ட காடு | |
|---|---|
| பாதுகாக்கப்பட்ட காட்டின் அமைவிடம் | |
| அமைவிடம் | மத்திய மாகாணம், இலங்கை |
| கிட்டிய நகரம் | கண்டி |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| நிறுவப்பட்டது | 2010 |
| நிருவாக அமைப்பு | வனப் பாதுகாப்புத் திணைக்களம் |
ஹந்தனை மலைத்தொடர் என்பது இலங்கையின் மத்திய மலைநாட்டிற் கண்டி மாநகருக்குத் தென்மேற்காக அமைந்துள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது தேசிய சுற்றாடற் சட்டத்தின் கீழ் ஒரு சுற்றாடற் பாதுகாப்புப் பகுதியாக 2010 பெப்ரவரியிற் குறித்துரைக்கப்பட்டது.[1] இம்மலைத்தொடரின் ஆகக் கூடிய உயரம் 3800 அடி. இது ஏழு மலையுச்சிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஆக உயரமான மலையுச்சி ஊரா கந்த என்பதாகும்.[2] இம்மலைத்தொடர் இலங்கையின் மலையேறிகளிடையே மிகவும் பெயர் பெற்றதாகும். ஹந்தனை மலைத்தொடருக்கு அணித்தாகவே பேராதனைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.[3]
படத்தொகுப்பு [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Committee to manage Hanthana Protection Area". Daily News. September 3, 2010. http://www.dailynews.lk/2010/09/03/news50.asp. Retrieved 04-02-2011.
- ↑ "Heavenly High at Hanthana". tops.lk. January 24, 2010. http://www.tops.lk/spotarticle245-heavenly-high-at-hanthana.html. Retrieved 04-02-2011.
- ↑ "Doing their bit to heal the earth". Sunday Times. 17 October, 2010. http://sundaytimes.lk/101017/Magazine/sundaytimesmirror_01.html. Retrieved 04-02-2011.