திருப்பெரும்புதூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்ரீபெரும்புதூர் வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருப்பெரும்புதூர் வட்டம் , தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருப்பெரும்புதூர் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் திருப்பெரும்புதூர், வல்லம், சுங்குவார்சத்திரம், மதுரமங்கலம், தண்டலம், படப்பை, சீரபனஞ்சேரி என 7 உள்வட்டங்களும், 137 வருவாய் கிராமங்களும் உள்ளன. [2]

இவ்வட்டத்தில் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 510,836 ஆகும். அதில் 258,881 ஆண்களும், 251,955 பெண்களும் உள்ளனர். 125,938 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 43.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 83.74% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 973 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 58036 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 952 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 143,544 மற்றும் 4,130 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.53%, இசுலாமியர்கள் 4.85%, கிறித்தவர்கள் 5.87% மற்றும் பிறர் 0.75% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]