வேதாரண்யம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதாரண்யம் வட்டம் , தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக வேதாரண்யம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 57 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் மற்றும் வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் மக்கள்தொகை 2,16,065 கொண்டது. மக்கள்தொகையில் 107,217 ஆண்களும், 108,848பெண்களும் உள்ளனர். 59,588 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 78.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 83.05% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,015 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19835 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 46,121 மற்றும் 115 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.13%, இசுலாமியர்கள் 3.25%, கிறித்தவர்கள் 0.85% மற்றும் பிறர் 0.76% ஆகவுள்ளனர்.[2]

பொருளாதாரம்[தொகு]

வங்காள விரிகுடா கடற்கடை ஒட்டிய இவ்வட்டத்தின் முதன்மைத் தொழில் வேளாண்மை, மீன்பிடித்தல், உப்பு உற்பத்தி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதாரண்யம்_வட்டம்&oldid=3794045" இலிருந்து மீள்விக்கப்பட்டது