வேணாட்டடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேணாட்டடிகள் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார்.

வேணாடு[தொகு]

வேணாடு என்பது தென் திருவாங்கூர்ப் பகுதிக்குரிய பழம்பெயர் ஆகும். வேணாடு, சேர நாட்டிற்கும் தென் பாண்டி நாட்டிற்கும் நடுவே உள்ளது.[1]

வழிபாடு[தொகு]

இந்நிலப்பகுதியை ஆண்ட அரசர் குடும்பத்தில் பிறந்து இறைவனை தமிழால் பாடிப் போற்றிய குறுநில மன்னரே வேணாட்டடிகள். இவர் சிவபெருமானிடத்துக் கொண்ட அளவற்ற பக்திப் பெருக்கால் பல சிவத்தலங்களுக்கும் சென்று சிவபெருமானைப் பாடி வழிபட்டார்.

ஒரு பதிகம்[தொகு]

இவர் பாடிய திருவிசைப்பாப் பதிகம் ஒன்றே உள்ளது. அப்பதிகம் (கோயில்) சிதம்பரத்தில் எழுந்தருளிய இறைவன் மீது பாடப்பட்டதாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேணாட்டடிகள்&oldid=2718258" இலிருந்து மீள்விக்கப்பட்டது