வெ. இறையன்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு முழுவதும் இலக்கிய ஆர்வமுடைய அனைவராலும் அறியப்பட்ட வெ. இறையன்பு தமிழ்நாடு அரசில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். சேலத்தைச் சேர்ந்த இவர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் இலக்கியப் பற்றுடையவர், தமிழில் பல நூல்களை எழுதியிருப்பதுடன் பட்டிமன்றங்களில் நடுவராகவும் பங்கேற்று சிறப்புப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய வாய்க்கால் மீன்கள் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]
எழுதியுள்ள நூல்கள் [தொகு]
- வாய்க்கால் மீன்கள்
- ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்
- ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
- ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)
- ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)
- சின்னச் சின்ன வெளிச்சங்கள்
- சின்னச் சின்ன மின்னல்கள்
- உள்ளொளிப் பயணம்
- ஏழாவது அறிவு (முதல் பாகம்)
- ஏழாவது அறிவு (இரண்டாம் பாகம்)
- ஏழாவது அறிவு (மூன்றாம் பாகம்)
- முகத்தில் தெளித்த சாரல்
- மென்காற்றில் விளை சுகமே!
- ஆத்தங்கரை ஓரம்
- அரிதாரம்
- படிப்பது சுகமே!
- பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்
- வேடிக்கை மனிதர்கள்
- நரிப்பல்
- அழகோ அழகு
- பனிப் பண்பாடு
- வாழ்கையே ஒரு வழிபாடு
- சிற்பங்களை சிதைக்கலாமா
- சாகவரம்
- வேடிக்கை மனிதர்கள்
- புனாத்தி
- வைகை மீன்கள்
- நெஞ்சை தொட்டதும் சுட்டதும்
- சரூக்கு மரம்
- பத்தாயிரம் மைல் பயணம்
- திருப்பாவை திறன்
- RANDOM THOUGHTS
- உன்னோடு ஒரு நிமிடம்
அடிக்குறிப்புகள் [தொகு]
- ↑ தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.