வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற ஆறாவது படலமாகும்.

படலச் சுருக்கம்[தொகு]

இதில் சிவபெருமானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் மதுரைப்பதியிலே திருமணம் முடிந்த பின்னர்,திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் உணவு உண்ண சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் அழைத்தார். திருமணத்திற்கு வந்திருந்தோரில் பதஞ்சலி முனிவரும்,வியாக்கிரபாத முனிவரும் சிவபெருமானிடம் பொன்னம்பலத்தில் ஆடியருளும் திருநடனத்தை மதுரைப்பதியிலே ஆடக்கோரியதும், சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் ஆடிய திருநடனத்தை [1] கூறும் படலமாகும்.

சான்றாவணம்[தொகு]

  1. திருவிளையாடல்-கங்கை புத்தக நிலையம் சென்னை.5வது பதிப்பு-ஆகத்து-2010