வெண்டாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்டாளி

வெண்டாளி என்பது ஒரு காட்டுச்செடி.

சதைப்பற்றுடன் சுனைமுள் கொண்ட இலைகளைத் ‘தாளி’ என்றனர். இந்தச் செடியில் வெண்மையான பூக்கள் பூப்பதால் இதனை வெண்டாளி என்றனர்.

இடைச்சங்க காலத்துப் பாடப்பட்ட நூல்களில் ஒன்றின் பெயர் வெண்டாளி. [1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது. வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப் பெற்ற இச்சங்கம் முடத்திருமாறன் முடிய 59 மன்னர்களால் நடத்தப் பெற்றது. இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார் வெள்ளூர்க் காப்பியனார் போன்ற3700 புலவர்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்றவை கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் போன்ற நூல்களாகும். - இறையனார் களவியல் உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்டாளி&oldid=3837893" இலிருந்து மீள்விக்கப்பட்டது