வெண்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்டளை என்பது தமிழ்ப் பாடல்களில் காணப்படும் பண்டைய யாப்பிலக்கணக் குறியீடு. இதன் ஓசை வினாவுக்கு விடை செப்புவது போல அமைந்திருப்பதால் இதனைச் செப்பலோசை எனக் கூறுவர். [1] [2] இது வெண்பா யாப்புக்கு உரியது. எனினும் பிற யாப்புப் பாடல்களிலும் பயின்று வரும். இது இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என இரண்டு வகைப்படும்.

வெண்சீர் வெண்டளை[தொகு]

வெண்சீர் என்பது தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் என்னும் வாய்பாடுகளைக் கொண்டு அமையும் காய்சீர்கள். காய்ச்சீர் முன் நேர்-அசை வந்து தளைவது வெண்சீர் வெண்டளை.

எடுத்துக்காட்டு

யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு. [3]

இயற்சீர் வெண்டளை[தொகு]

ஈரசை கொண்டு தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்னும் வாய்பாட்டான் அமையும் சீர்களை 'இயற்சீர்' என்பர். இந்த இயற்சீர்கள் நேர்-அசையில் முடிந்து நிரை-அசை கொண்டோ, நிரை-அசையில் முடிந்து நேர்-அசை கொண்டோ தளையுமாயின் அது இயற்சீர் வெண்டளை எனப்படும்.

எடுத்துக்காட்டு
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். [4]

அடிக்குறிப்பு[தொகு]

  1. அகவல் என்பது ஆசிரியம்மே (தொல்காப்பியம் 3-386)
  2. 'அஃதாஅன்று' என்ப-'வெண்பா யாப்பே' (தொல்காப்பியம் 3-387)
  3. திருக்குறள் 397
  4. திருக்குறள் 28
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்டளை&oldid=1484051" இலிருந்து மீள்விக்கப்பட்டது