வடக்கு வியட்நாம்
|
|||||||||||||||||||||||||||||||||
வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic of Vietnam) என்பது வியட்நாமின் வடக்கில் இருந்த ஒரு நாடு. வியட்நாம் முழுவதும் இடம்பெற்ற ஆகஸ்ட் புரட்சியை அடுத்து, 1945 செப்டம்பர் 2 ஆம் நாள் ஹனோய் நகரில் கம்யூனிச அரசாக ஹோ சி மின் அறிவித்தார்.
1946 ஜனவரி 1 இல் வியட்நாமில் முதலாவது பொதுத் தேர்தல் இடம்பெற்றது. 333 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் தேசிய அவை அமைக்கப்பட்டது. 1946 மார்ச் 2 இல் ஹோ சி மின் அரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டார். முன்னாள் வியட்நாமியப் பேரரசர் பாவோ டாய் நாட்டின் அதிஉயர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 11 இல் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வடக்கு வியட்நாம், தெற்கு வியாட்நாமின் விடுதலைக்கான தேசிய முன்னணி (வியட் கொங்) ஆகியன இணைந்து வியட்நாம் போர் எனப்படும் இந்தோ-சீனப் போரை வென்றெடுத்தன. 1954 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் ஏற்பட்ட தற்காலிக அமைதி உடன்படிக்கையை அடுத்து, வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு அரசு வடக்கு வியட்நாம் என்ற பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஜெனீவா உடன்படிக்கைக்கு ஏற்ப தெற்கு வியட்நாமிய அரசு ஒன்றுபட்ட பொதுத்தேர்தலில் பங்கு பற்றத் தவறியதை அடுத்து, வியட்நம் 1975 ஆம் ஆண்டு வரையில் பிரிந்திருந்தது. அதன் பின்னர் வடக்கு வியட்நாமும் வியட் கொங் படையினரும் இணைந்து தெற்கு வியட்நாமை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இரண்டையும் வியட்நாம் என்ற பெயரில் ஒன்றாக்கி இன்று வரையில் வடக்கில் இருந்ததைப் போல கம்யூனிச ஆட்சி நிலாவி வருகிறது.
