வினைத்தொழில் சோகீரனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகை

வினைத்தொழில் சோகீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது நற்றிணை 319 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது.

புலவர்பெயர் விளக்கம்[தொகு]

தலைவன் தான் செய்ய விரும்பும் தொழிலில் சோகம் காண்பதை இப்பாடல் தெரிவிப்பதால் இப்பாடலைப் பாடிய புலவர் பாடற்பொருளால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளார்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

  • திணை - நெய்தல்

காதலிக்குக் காப்பு மிகுந்துள்ளது. நள்ளிரவில் தலைவன் உறக்கமின்றித் தன் காதலியை எண்ணிக்கொண்டிருக்கிறான்.

ஓதம் - கடல்லை ஓய்வின்றி ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஊதை - ஊதைக்காற்று 'அவ் அவ்' என்று உதடுகள் நடுங்கும்படி வீசுகிறது.
கூகை - மணல் பரந்துகிடக்கும் தெருச் சதுக்கத்தில் இருந்துகொண்டு குழறுகிறது.
அணங்கு - நள்ளிரவில் அணங்குகள் தரையில் கால் பாவி நடமாடுகின்றன.

இந்த வேளையில் பாவை போன்ற அவளது முலை முயக்கம் என் நெஞ்சை வாட்டுகிறது; என் செய்வேன் என்று காதலன் கலங்குகிறான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைத்தொழில்_சோகீரனார்&oldid=2071672" இலிருந்து மீள்விக்கப்பட்டது