விதர்ப்பதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விதர்ப்பதேசம் விந்தியமலையின் தெற்கில் மலை அடிவாரம் முதல் கிழக்கில் சிபரா நதி உருவாகும் இடம் வரையிலும், மேற்கில் நர்மதை நதி உருவாகும் இடம் வரையிலும், பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசத்தின் பூமி சம தளமானது, விந்திய மலையின் ஓரத்தில் மிகவும் உயர்ந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கில் தாழ்ந்தும் பெரிய பெரிய மலைகள் நிறைந்தும் காணப்படுகிறது.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசமானது விந்தியமலைக்கு அருகில் இருப்பதால் தொடர்குன்றுகள் நிறைந்தும், கற்பாறைகள் மிகுந்தும் வளம் குன்றியும், சிறிய காடுகளும், அவைகளில் கரடி, பன்றி, புலி, யானை, குயில், மயில், அணில் ஆகிய விலங்குகள் அதிகமாக இருக்கும்.

நதிகள்[தொகு]

இந்த தேசத்தின் நதிகள் விந்தியமலையில் ஓடும் மலையருவிகளே ஆகும். இவற்றில் கும்பிலா நதி முக்கியமானதாகும்.

விளைபொருள்[தொகு]

இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாமிரம், பித்தளை, முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களையும், இரும்பாலான ஆயுதங்களையும் அம்மக்கள் பயன்படுத்தினர்.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 146 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதர்ப்பதேசம்&oldid=2076833" இலிருந்து மீள்விக்கப்பட்டது