வர்மக்கலை
வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது.
பொருளடக்கம் |
வர்மம் [தொகு]
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் னப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர். 108 வர்மங்களில் 12 படு வர்மங்களும் (மரணம் ஏற்படுத்தக்கூடியவை), 96 தொடு வர்மங்களும் உள்ளன. வர்ம தாக்கத்திற்கு மாற்றீடாக மேற்கொள்ளப்படும் வர்மம் மயக்க நிலையிலிருந்து சுகமளிக்கக்கூடியது.[1]
சித்தர்களின் வர்ம நூல்கள் [தொகு]
- ஒடிவு முறிவு சாரி - அகத்தியர்
- வர்ம சூத்திரம் - போகர்
- வர்ம காண்டம் - புலிப்பாணி
உசாத்துணை [தொகு]
- ↑ Luijendijk, D.H. Kalarippayat: The Essence and Structure of an Indian Martial Art, Oprat, 2008
வெளி இணைப்புகள் [தொகு]
- வர்மக்கலை பற்றிய சித்தர் பாடல்கள் தோழி
- Silambam.us மலேசியா சிலம்ப அகடாமி
- Simbhalan Panickar
- perso.wanadoo.fr
- World Varma Kalai Federation
- வர்மக்கலை சரவண ராஜேந்திரன்
- சண்டை வர்மக்கலை