வங்காளதேசம் ஊர் முன்னேற்ற செயற்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காளதேசம் ஊர் முன்னேற்ற செயற்குழு அல்லது பிராக் (Bangladesh Rural Advancement Committee) வங்காளதேசத்தில் இயங்கும் ஒரு அரச சார்பற்ற சமூக சேவை நிறுவனம் ஆகும். பத்துதவி, மருத்துவம், சிறுகடன், ஏழ்மை ஒழிப்பு ஆகிய துறைகளில் இது முதன்மையாக இயங்குகிறது. 1972 ம் ஆண்டு வங்காளதேசம் விடுதலை அடைந்த போது, அப்போதைய பேரழிவைக் கண்டு இது தொடங்கப்பட்டது. இன்று தொழிலாளர்கள், தொண்டர்கள், பயனர்கள் அடிப்படையில் உலகின் மிகப் பெரும் அரச சார்பற்ற நிறுவனம். இந்த அமைப்பில் 100 000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.[1] வங்காளதேசம் நலம் அளவீடுகளில் முன்னேற்றம் கண்டதற்கு இந்த நிறுவனத்தின் பங்களிப்பு கணிசமானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The World's Most Powerful Development NGOs". Archived from the original on 2009-01-13. பார்க்கப்பட்ட நாள் 2009-12-27.

வெளி இணைப்புகள்[தொகு]