ரேயிலிசம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேயிலிசம் (Raëlism) என்பது வெளிக் கோள் வாசிகளை நம்பும் ஒரு சமயம் ஆகும். இந்தச் சமயத்தை ரேயில் என அறியப்படும் குளோட் வொறில்கோன் (Claude Vorilhon) என்பவர் நிறுவினார்.
ரேயிலிசத்தின் இறையியலின் படி உலகில் உயிரினங்கள் எல்கோம் எனப்படும் வெளிக் கோள் வாசிகளால் உருவாக்கப்பட்டது என்று நம்புகிறார்கள். எலோகிம் மனிதர்கள் போல் தோற்றம் கொண்டவர்கள் என்றும், அவர்கள் மனித வழித்தோன்றல்களுடன் தொடர்பை ஏற்படுத்திய போது அவர்களை மனிதர்கள் தேவர்கள் அல்லது கடவுகள் என்று கருதினார்கள் என்றும் நம்புகிறார்கள். புத்தர், யேசு, மற்றும் பிற பலர் எலோகிமின் தூதுவர்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள்.
இந்தச் சமயத்தை சுமார் அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தற்போது நம்புகிறார்கள், அல்லது கடைப்பிடிக்கிறார்கள்.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் ரேயிலிசம் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |