ரமணிசந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரமணி சந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரமணிசந்திரன்
பிறப்பு10 சூலை 1938 (1938-07-10) (அகவை 85)
திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியா

ரமணி சந்திரன் (Ramanichandran) ஒரு தமிழக எழுத்தாளர். குடும்பச் சூழல், அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு பல புதினங்களை எழுதியுள்ளார். 1970 ஆம் ஆண்டிலிருந்து எழுதுகிறார். இவருடைய முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள்’[1].

படைப்புகள்[தொகு]

ரமணிசந்திரன் முதன்முதலாக 1964 ஆம் ஆண்டில் ராணி இதழில் சிறுகதை எழுதினார். பின்னர் தினத்தந்தி இதழில் நெடுங்கதைகள் எழுதினார். 2003ஆம் ஆண்டு செப்டம்பர் வரை 101 நெடுங்கதைகள் எழுதியுள்ளார்.[2]

  1. வாழ்வு என் பக்கம்
  2. ஆசை ஆசை ஆசை
  3. அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ
  4. அடிவாழை
  5. அமுதம் விளையும்
  6. அன்பின் தன்மையை அறிந்த பின்னே
  7. அதற்கொரு நேரமுண்டு
  8. அவள் ஒரு தேவதை
  9. அவனும் அவளும்
  10. அழகு மயில் ஆடும்
  11. சந்தினி
  12. எல்லாம் உனக்காக
  13. என் உயிர் நீதானே
  14. எனது சிந்தனை மயங்குதடி
  15. என்னை யாரென்று எண்ணி எண்ணி
  16. என்னுளே நிறைந்தவளே
  17. கான மழை நீ எனக்கு
  18. இடைவெளி அதிகமில்லை
  19. இனி எல்லாம் நீ அல்லவா
  20. இறைவன் கொடுத்த வரம்
  21. இருளுக்கு பின்வரும் ஜோதி
  22. இது ஒரு உதயம்
  23. காதல் கொண்ட மனது
  24. காதல் என்னும் சோலையிலே
  25. காக்கும் இமை நான் உனக்கு
  26. கல்யாணத்தின் கதை
  27. கண்ணிலே இருப்பதென்ன
  28. கண்ணால் பார்த்த வேளை
  29. கண்ணன் மனம் என்னவோ
  30. கண்ணே கண்மனியே
  31. கண்ணின் மணி போன்றவளே
  32. கண்ணும் கண்ணும் கலந்து
  33. காத்திருக்கிறேன் ராஜகுமாரா
  34. காற்று வெளியிடை கண்ணம்மா
  35. காவியமோ ஓவியமோ
  36. கிழக்கு வெளுத்ததம்மா
  37. கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
  38. லாவண்யா
  39. மானே மானே மானே
  40. மதுமதி
  41. மைவிழி மயக்கம்
  42. மாலை மயங்குகின்ற நேரம்
  43. மயங்குகிறாள் ஒரு மாது
  44. மெல்ல திறந்தது கதவு
  45. நாள் நல்ல நாள்
  46. நான் உன்னை நீங்க மாட்டேன்
  47. நான் என்பதும் நீ என்பதும்
  48. நந்தினி
  49. நாத சுர ஓசையிலே
  50. நெஞ்சே நீ வாழ்க
  51. நெஞ்சோடு நெஞ்சம்
  52. நேச நதி கரையில்
  53. நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
  54. நிலா காயும் நேரம்
  55. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
  56. நின்னையே ரதி என்று
  57. ஒன்று பட்ட உள்ளங்கள்
  58. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமோ
  59. ஒரு சின்ன ரகசியம்
  60. பால் நிலா
  61. பக்கத்தில் ஒரு பத்தினி பெண்
  62. பாலை பசுங்கிளியே
  63. பார்க்கும் விழி நான் உனக்கு
  64. பார்த்த இடத்தில் எல்லாம்
  65. பொன் மானை தேடி
  66. பொங்கட்டும் இன்ப இரவு
  67. பூங்காற்று
  68. பிரிய மனம் கூடுதில்லையே
  69. புன்னகையில் புது உலகம்
  70. சிவப்பு ரோஜா
  71. சொந்தம் என்னாளும் தொடர்கதைதான்
  72. சுகம் தரும் சொந்தங்களே
  73. தண்ணீர் தணல் போல் தெரியும்
  74. தந்துவிட்டேன் என்னை
  75. தவம் பண்ணிடவில்லையடி
  76. தென்றல்வீசி வர வேண்டும்
  77. உன் முகம் கண்டேனடி
  78. உறங்காத கண்கள்
  79. வாணியை சரண் அடைந்தேன்
  80. வாழும் முறைமையடி
  81. வாரிசு
  82. வைர மலர்
  83. வலை ஓசை
  84. வல்லமை தந்துவிடு
  85. வந்து போகும் மேகம்
  86. வீடு வந்த வெண்ணிலவு
  87. வெண்மையில் எத்தனை நிறங்கள்
  88. வெண்ணிலவு சுடுவதென்ன
  89. விடியலை தேடும் பூபாளம்
  90. யாருக்கு மாலை
  91. ஏற்றம் புரிய வந்தாய்
  92. பொன் மகள் வந்தாள்

விருது[தொகு]

ரமணிசந்திரனுக்கு அவர் எழுதிய "வண்ணவிழிப் பார்வையிலே" என்ற நெடுங்கதைக்காக 2003 ஆம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசிற்குரிய வெள்ளிப்பட்டயம், 50000 உருபாய்க்கான பொற்கிழி, பொன்னாடை ஆகியவற்றை நீதிபதி கி.கோவிந்தராசன் 2003 செப்டம்பர் 28ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் வழங்கினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "எழுதும்போது பிபி அதிகமாகுது! ரமணிசந்திரன்". 2012. Archived from the original on 30 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 தினத்தந்தி, 2003 செப்டம்பர் 23, பக்.1, 23
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமணிசந்திரன்&oldid=3767690" இலிருந்து மீள்விக்கப்பட்டது