யோசப் பரராஜசிங்கம் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான யோசப் பரராஜசிங்கம் அவர்கள் டிசம்பர் 24, 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் வைத்து அடையாளம் காணப்படாத ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராகவும், பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினராவும் இருந்தவர்.

யோசப் பரராஜசிங்கம்

"மாமனிதர்" பட்டம்[தொகு]

இறப்பின்பின் யோசப் பராஜசிங்கத்துக்கு விடுதலைப் புலிகளால் "மாமனிதர்" பட்டம் வழங்கப்பட்டது.

கிளிநொச்சியில் அஞ்சலி[தொகு]

அவரது உடல் கிளிநொச்சிக்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பிரபாகரன் உட்பட முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்கள், மலையக தமிழர் தலைவர்கள், பிற முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]