யோக கணபதி
இந்து சமயத்தில், யோக கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 30வது திருவுருவம் ஆகும். பன்னிரு ராசிகள் ஐக்கியமாகி "ஒன்றாய் அமர்ந்திட்ட உருவம்" யோக கணபதி எனப்படுகிறது.[1]
திருவுருவ அமைப்பு[தொகு]
யோக நிலையில் யோகபட்டம் தரித்துக்கொண்டு, இளஞ்சூரியன் போன்ற நிறத்தோடு, இந்திரநீலம் போன்ற ஆடையை உடுத்திக்கொண்டு, பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு இவற்றை ஏந்தி இருப்பவர்.
நம்பிக்கைகள்[தொகு]
இந்தத் தெய்வத்தை வழிபட்டால் பன்னிரு ராசிகளின் பலன்களும் கிட்டும் என்று இந்து சமயத்தினர் நம்புகின்றார்கள்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "ராசியின் பலனைப் பெருக்கிடும் ராசி கணபதி வழிபாடு". hindu.com. திகனரன். 2000 கள். Archived from the original on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-14.
{{cite web}}
: Check date values in:|year=
(help)