யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் 1900 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் த. கைலாசபிள்ளை என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தில், ஆரம்பத்தில் கொக்குவில் சி. சபாரத்தின முதலியார் செயலாளராகவும், சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் தலைமைப் பரீட்சகராகவும் மற்றும் சிறப்பு ஆலோசகராகவும், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, வட்டுக்கோட்டை ஆறுமுக உபாத்தியாயர், ஊரெழு சு. சரவணமுத்துப் புலவர், நல்லூர் வே. கனகசபாபதி ஐயர் முதலியோர் உறுப்பினராகவும் இடம்பெற்றனர்.[1]

2012 ஆம் ஆண்டில் பேராசிரியர் அ. சண்முகதாசின் முயற்சியினால் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. குமாரசுவாமி புலவர் வரலாறு - கு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, 1952.

வெளி இணைப்புகள்[தொகு]