யதுகிரி அம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யதுகிரி அம்மாள் என்று அறியப்படும் யதுகிரி பாரதி சில நினைவுகள் எனும் பாரதியார் குறித்த வரலாற்று நூலை எழுதியவர்.

யதுகிரி புதுச்சேரியில் சுதேசிகளுக்கு உதவி வந்த மண்டையம் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியார் அவர்களின் புதல்வி. இவர் தான் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு இந்தியா பத்திரிக்கையை ஆரம்பித்தவர். யதுகிரி பாரதியின் வீட்டில் மூன்றாவது குழந்தையாகவே கருதப்பட்டார். பாரதியார் அடிக்கடி யதுகிரியின் வீட்டிற்கு வருவார். அப்போது தான் எழுதிய பாடல்களைப் பாடிக்காட்டுவார். அவற்றை யதுகிரி தனது குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் கொள்வார். இப்படியாக பாரதியின் பாடல்களும் அவை தோன்றிய சூழல் குறித்தும் யதுகிரி அம்மாள் நன்றாக அறிந்திருந்தார். 1939 ஆம் ஆண்டு பாரதி சில நினைவுகள் எனும் நூலை யதுகிரி எழுதினார். ஆனால் எழுதப்பட்டு 15 ஆண்டுகள் கழிந்த பின்னே இந்நூல் வெளியானது. அதைப்பார்க்க யதுகிரி அம்மாள் உயிருடன் இல்லை.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யதுகிரி_அம்மாள்&oldid=2638011" இலிருந்து மீள்விக்கப்பட்டது