மேமன்கவி
மேமன்கவி (அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.
இவரது முதலாவது கவிதை 1974 ஆம் ஆண்டு சுதந்திரன் இதழில் தமிழே என் மூச்சு எனும் தலைப்பில் வெளிவந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஆரம்பத்திலிருந்து தொடர்புகளைப் பேணி வருகிறார். 1990 ஆம் ஆண்டுக்கான இலங்கை சாகித்திய மண்டல பரிசை இவரது நாளைய நோக்கிய இன்றில் கவிதைத் தொகுதிக்காகப் பெற்றார்.
பல சஞ்சிகைகளுக்கு ஆசிரியராகவும், உதவி ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். இவரது கவிதைகள் சில ஆங்கிலம், சிங்களம், ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கபட்டுள்ளன. கவிதை ஓன்று தேசீய கல்வி நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் பயிற்சி பாட நூலில் இடம் பெற்று இருக்கிறது. சப்பரகமுவ பல்கலைக்கழகத்தில் கலைமாணி பாட நெறி மேற்கொண்ட மாணவர் ஒருவர் இவரது கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.
[தொகு] இவரது நூற்கள்
- யுகராகங்கள் (1976, எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம்)
- ஹிரோசிமாவின் ஹீரோக்கள் (1982, நர்மதா பதிப்பகம், தமிழ் நாடு)
- இயந்திர சூரியன் (1984, நர்மதா பதிப்பகம், தமிழ் நாடு)
- நாளையை நோக்கிய இன்றில் (1990, நர்மதா பதிப்பகம், தமிழ் நாடு)
- மீண்டும் வசிப்பதற்காக (1999, மல்லிகைப் பந்தல்)
- உனக்கு எதிரான வன்முறை (2005, துரைவி வெளியீடு)
- ஒரு வாசகனின் பிரதிகள் -கட்டுரைத் தொகுப்பு(2010, கொடகே வெளியீடு)
[தொகு] விருதுகள்
- 1990 - நாளைய நோக்கிய இன்றில், இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு.
- 2005 - உனக்கு எதிரான வன்முறை, யாழ். இலக்கிய வட்டத்தின் இணைப்புச் சங்கமான இலங்கை இலக்கியப் பேரவையின் சிறப்பு விருது.
[தொகு] வெளி இணைப்புக்கள்
- உனக்கு எதிரான வன்முறை - மின்னூல் - நூலகம் திட்டம்
- Man of Pakistani origin makes waves as Tamil poet, dawn.com, திசம்பர் 30, 2011