மெழுகுவர்த்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெழுகுவர்த்தி அல்லது மெழுகுதிரி என்பது மெழுகை எரிபொருளாகக் கொண்டு ஒளி தருவது. கெட்டி மெழுகின் நடுவே நூல் திரி ஒன்றைக் கொண்டிருக்கும். நெருப்பைப் பற்ற வைத்ததும் மெல்ல மெல்ல அருகில் உள்ள மெழுகு இளகும். இதனால் திரியில் உள்ள தீ தொடர்ந்து எரியும்.
இந்த மெழுகுவர்த்தி இரவு நேரங்களில் மின்சாரமில்லாத நேரங்களில் ஒளித் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கிறித்தவ சமய வழிபாட்டில் மெழுகுவர்த்தி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.