மூன்றாம் விஜயபாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்றாம் விஜயபாகு (கி.பி. 1232 - 1236 ஆட்சிக்காலம்) தம்பதெனியாவைத் தலைநகராகக் கொண்டு இலங்கையில் ஆட்சி செய்தவன். தமிழ் மக்கள் வாழ்ந்த வன்னிப் பிரதேசங்களுடன் ஓரளவாயினும் தொடர்புடைய இவன் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்தான்.

மாகோன் இராஜரட்டையை ஆட்சி செய்த காலத்தில் மூன்றாம் விஜயபாகு மாயரட்டையில் உள்ள சீகள வன்னியை அடக்கி ஆட்சிபுரிந்தான் எனப் "பூஜாவலிய" கூறுகின்றது. மேலும் இவன் வன்னி அரசன் என்ற நிலையை அடைந்து மாயரட்டையில் ஆதிக்கம் செலுத்தியவன் என "சூளவம்சம்" கூறுகின்றது.

உசாத்துணை[தொகு]

  • க. தங்கேஸ்வரி (ப - 94,95) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_விஜயபாகு&oldid=3631593" இலிருந்து மீள்விக்கப்பட்டது