முஸ்லிம் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முஸ்லிம்கள் தமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழ் முஸ்லிம்கள் (குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்) அன்றாடம் தங்கள் வாழ்வியலில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான தொகுப்புகள். இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் பெரும்பாலானோர் தமிழையே தாய்மொழியாகக் கொண்டுள்ளதோடு இவற்றில் பெரும்பாலானவற்றைப் பாவிக்கின்றனர்.

உலக முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்[தொகு]

இதில் சில வார்த்தைகள் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு உரியவைகளாகும், அதாவது அப்படிப்பட்ட வார்த்தைகள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பயன்படுத்தும் வார்த்தைகளாகும். அவை பெரும்பாலும் அரபி மொழி உச்சரிப்பை கொண்டிருக்கும்.

  1. அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.
  2. அல்லாஹ் - ஒரிறை (அதனைப் போன்ற ஒன்று இல்லை)
  3. முஹம்மத் - முஹம்மத் நபி, இறைத்தூதர்.
  4. பிஸ்மில்லாஹ் - அல்லாஹ்வின் பெயரால். இந்த வார்த்தை பெரும்பாலும் ஒரு செயலை துவங்கும் பொழுது சொல்லப்படும்.
  5. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
  6. இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால்.
  7. அல்ஹம்துலில்லாஹ் - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
  8. ஜகாத் - ஏழைகளுக்கு வழங்கப்படுவதற்கான (அரசாங்க) வரி. அரசு வசூலிக்கவில்லையெனின் கடமையானோர் தாமாகவே இவ்வரி பெறத்தக்கவர்க்கு வழங்குதல் முஸ்லிம்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.
  9. ஷைத்தான் - தீய செயல்களுக்கு தூண்டுகிறவன்
  10. மாஷா அல்லாஹ் - மனம் திருப்தியாகும்போது
  11. ஸுப்ஹானல்லாஹ் - ஆச்சரியப்படும்போது

தமிழ் முஸ்லிம்கள் உறவு முறை வார்த்தைகள்[தொகு]

தமிழகத்தைப் பொறுத்தவரை உறவுமுறைகளில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கும். காரணம் ஒரு ஊரில் பயன்படுத்தும் வார்த்தைகள் பக்கத்து ஊரில் வேறு மாதிரியாய், அப்படியே தலைகீழாய் கூட இருக்கும்.

  1. அத்தா, பாப்பு, பாபா, பாவா என்கிற வார்த்தைகளை இராவுத்தர்கள் அழைப்பர். "அத்தா" என்பதைப் பெரும்பாலும் உபயோகப்படுத்த பார்க்கலாம் "வாவா" என்று திருநெல்வேலி மாவட்டம் தென்காசிபகுதியில் அழைக்கிறார்கள்.
  1. வாப்பா - கடற்கரை பகுதிகளான காயல்பட்டினம், கீழக்கரை, பரங்கிப்பேட்டை, அதிராம்பட்டினம், தொண்டி, இராமநாதபுரம், காரைக்கால், நாகூர் (தமிழ் நாடு) போன்ற ஊர்களில் அழைக்கிறார்கள். மரைக்காயர்களாய் இருப்பார்கள் உம்மா - அம்மா காயல்பட்டினம் அழைக்கிறார்கள்.
  2. உம்மம்மா, பெரியம்மா, அம்மம்மா, சேத்தா - அம்மாவுடைய அம்மா, பெரியம்மா என்று காயல்பட்டினம்,அதிராம்பட்டிணத்தில் அழைக்கிறார்கள், உம்மம்மா, சேத்தா என்று பரங்கிப்பேட்டையில் அழைக்கிறார்கள்.
  3. லாத்தா, ராத்தம்மா, லாத்தம்மா, பெத்தம்மா(கோயம்பத்தூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்கள்)- அம்மாவின் பெரிய சகோதரி, பெரியம்மா என்று சில ஊர்களில் இராவுத்தர்கள் அழைக்கிறார்கள். பியாமா, பெரிமா என்று காயல்பட்டினம், பரங்கிப்பேட்டையில் அழைக்கிறார்கள்.
  4. சாச்சி காயல்பட்டினம்,(அதிராம்பட்டிணம்) காலாமா (கோயம்பத்தூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்கள்) - அம்மாவின் தங்கை, சித்தப்பாவின் மனைவி. சின்மா, சின்னம்மா என்று பரங்கிப்பேட்டையில் அழைக்கிறார்கள்
  5. ராத்தா, லாத்தா - அக்கா, காயல்பட்டினம்,அதிராம்பட்டிணம், நாகூர் (தமிழ் நாடு), போன்ற ஊர்களில் ராத்தா என்றும், காரைக்கால்,உடன்குடி, பொறையாறு போன்ற ஊர்களில் லாத்தா என்றும், பரங்கிப்பேட்டையில், பழைய தஞ்சை மாவட்டங்களில் ஆச்சி, ஆச்சா, ஆப்பா, ராத்தா, பூ (Boo), பூவா என்றும் அழைக்கிறார்கள்.
  6. காக்கா, நானா காயல்பட்டினம்(இலங்கைத் தமிழ்: நாணா) - அண்ணன், உடன்குடி, நாகூர் (தமிழ் நாடு), கீழக்கரை, காயல்பட்டிணம், மற்றும் பரங்கிப்பேட்டை, அதிராம்பட்டினம் காக்காவும் பட்டுக்கோட்டை அண்ணன்களும், நானா என்று காரைக்கால், போன்ற ஊர்களில் அழைக்கிறார்கள். நானா, பாய் (Bhai) என்று பரங்கிப்பேட்டையில் அழைக்கிறார்கள்.
  7. சாச்சப்பா, சாச்சா, சச்சா, சின்னத்தா, சின்னவாப்பா - தந்தையின் சிறிய சகோதரர். சித்தப்பா, அம்மாவின் தங்கையின் கணவர் காயல்பட்டினம் போன்ற ஊர்களில் அழைக்கிறார்கள்.
  8. பெரியவாப்பா, பெரியப்பா, பெருத்தா, பெரியத்தா - தந்தையின் பெரிய சகோதரர், அம்மாவின் அக்கா கணவர். காயல்பட்டினம் போன்ற ஊர்களில் அழைக்கிறார்கள்.
  9. வாப்பி(பு)ச்சா, வாப்புமா, அத்தம்மா, சேத்தா - தந்தையின் தாய்(அதிராம்பட்டிணம், நாகூர் (தமிழ் நாடு), உடன்குடி, பரங்கிப்பேட்டை)காயல்பட்டினம் போன்ற ஊர்களில் அழைக்கிறார்கள்
  10. அப்பா - தாத்தா, அம்மாவின் தந்தை, அப்பாவின் தந்தை (அதிராம்பட்டிணம்,பரங்கிப்பேட்டை) இருவரையுமே இப்படித்தான் அழைக்கிறார்கள்.
  11. ராதா, ராதத்தா, அத்தத்தா, கண்ணுவாப்பா, தாதா - தந்தையின் தந்தை (தென்காசி),பழனி, பரங்கிப்பேட்டை பழைய தஞ்சை மாவட்டங்களில்.
  12. ராதி, ராதிமா, தாதி, தாதிமா - தந்தையின் தாய் (தென்காசி), பழனி, பரங்கிப்பேட்டை
  13. நானா, நன்னத்தா - அம்மாவின் அப்பா (தென்காசி), பழனி, அண்ணன்(காரைக்கால்), பரங்கிப்பேட்டை
  14. நானி(நி?), நன்னீமா, நானிமா - அம்மாவின் அம்மா(தென்காசி), பழனி, பரங்கிப்பேட்டை
  15. பெரிய வாவா - தந்தையின் மூத்த சகோதரர்
  16. சிறிய வாவா - தந்தையின் சிறிய சகோதரர்.
  17. மம்மானீ, மொம்மானீ - மாமாவின் மனைவி (பழனி, பரங்கிப்பேட்டை)
  18. மாமி(பழைய தஞ்சை மாவட்டங்களில்), குப்பி(தென்காசி), புப்பு - தந்தையின் சகோதரி பரங்கிப்பேட்டை
  19. காளா - அம்மாவின் சகோதரி (தென்காசி, பரங்கிப்பேட்டை)பழைய தஞ்சை மாவட்டங்களில்
  20. மச்சி (பழைய தஞ்சை மாவட்டங்களில்), மைனி (பரங்கிப்பேட்டை), மண்ணி(பள்ளப்பட்டி) - அண்ணனின் மனைவி.
  21. மச்சி (பழைய தஞ்சை மாவட்டங்களில்) - தாயின் சகோதரனின் மகள், தந்தையின் சகோதரியின் மகள் மற்றும் நாத்தனார்.
  22. மச்சான் (பழைய தஞ்சை மாவட்டங்களில்) - தாயின் சகோதரனின் மகன், தந்தையின் சகோதரியின் மகன் மற்றும் கொழுந்தனார்.
  23. குடியானவன் - இந்து மக்கள் (பழனி)
  24. நாசுவன்(அதிராம்பட்டிணம்), அம்பட்டையன் (பரங்கிப்பேட்டை)- நாவிதர், சிகை அலங்காரம் செய்பவர்

மார்க்க அறிஞர்கள்/மார்க்கம் தொடர்புடையவை[தொகு]

  1. மஸ்ஜித் - பள்ளி, பள்ளிவாசல்-வணக்கத்தலம்
  2. தொழுகை - இறைவணக்கம்
  3. ஹஜ்ரத், உஸ்தாத்(உருது) - ஆசிரியர், பாடம் நடத்துபவர்.
  4. மௌலவி - கற்றறிந்தவர்
  5. இமாம் - பள்ளிவாசலில் தொழுகையை முன் நின்று நடத்துபவர்.
  6. மோதினார், முஅத்தின் - பள்ளிவாசலை பராமரிப்பவர், தொழுகைக்கு அழைக்கும் பணி செய்பவர்.
  7. ஆலிம் - 7 ஆண்டு இஸ்லாமிய படிப்பை முடித்த பட்டதாரி. (ஆலிம் என்பதன் நேரடிப் பொருள் அறிஞர் என்பதாகும்)
  8. பாங்கு, அதான் - தொழுகைக்கான அழைப்பு.
  9. (திருக்) குர்ஆன் - முஸ்லிம்களின் புனித நூல். இது 1434 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ்வால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டது.
  10. ஹதீஸ் - முஹம்மது நபி அவர்களின் அன்றாட வாழ்க்கை வரலாற்று தொகுப்புகள். புஹாரி சரீப்

ஸஹீஹ் முஸ்லிம் பரணிடப்பட்டது 2012-03-27 at the வந்தவழி இயந்திரம் 6 புத்தகம் [1]

  1. சுன்னத் - நபிவழி, முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அதன்படி நடத்தல்.
  2. சூட்டுகறி நோன்பு(சுட்ட கறி)--பக்ரீத் பண்டிகை(பழனி)
  3. ஜும்ஆ - வெள்ளிக்கிழமை பகல் ஊர்மக்கள் அனைவரும் ஒரிடத்தில்(பள்ளிவாசலில்) கூடி நின்று தொழுதல்
  4. முத்தவல்லி -- பள்ளிவாசலின் தலைமை நிர்வாகி
  5. குத்பா (பேச்சு வழக்கில் 'கொத்துவா') - மார்க்கப் பிரசங்கம், வெள்ளிக்கிழமை ஜும்ஆ விலும் திருமணத்தின் பொழுதும் நிகழ்த்தப்படுதல்.
  6. ஈத் - பெருநாள், பண்டிகை, திருவிழா
  7. ஜும்ஆ, ஜும்மா - வெள்ளியன்று நடத்தப்படும் சிறப்பு வழிபாடு

உடை மற்றும் அலங்காரம்[தொகு]

  1. ஜிப்பா(jibba) - ஆண்கள் அணியும் வெள்ளைத் துணியிலான உடை.
  2. புர்கா, பர்தா(bardha) - பெண்கள் தங்களின் கண்ணியத்தை பேணுவதற்காக, பெண்மையை மறைப்பதற்காக அணியும் உடை. இவை அநேகமாய் கருப்பு நிறத்திலே இருக்கும்
  3. துப்பட்டி - உயர்தர வெள்ளைத் துணியிலான, பெண்கள் தங்களை மறைத்துக்கொள்வதற்கான உடை.
  4. சுர்மா - கண்திரைகளில் இடப்படும் ஒருவகை சுட்ட கல். இவை நபிவழி என்று நம்பப்படுகிறது.
  5. கைலி - தைக்கப்பட்ட லுங்கி

உணவு, பதார்த்தங்கள்[தொகு]

  1. கொலக்கட்டை - (கொழுக்கட்டை) ஒருவகை இனிப்பு பலகாரம், அரிசி மாவுடன் சிறுபறுப்பு, சக்கரை, சேர்த்து வேகவைத்து சாப்பிடுதல்
  2. வட்லப்பம் பழைய தஞ்சை மாவட்டங்களில் - முட்டை, சீனி, பால் போன்றவற்றை சேர்த்து நன்கு அடித்து பின் வேகவைத்து செய்யப்படும் விசேச பண்டம். இவை அநேகமாய் விருந்து, பண்டிகை நாட்களில் தயார் செய்கிறார்கள்.
  3. தேத்தண்ணி (பழைய தஞ்சை மாவட்டங்களில்) - தேநீர்
  4. தேக்சா - பிரியாணி செய்ய பயன்படும் பெரிய பாத்திரம்
  5. பணிக்கம் - எச்சில் துப்ப பயன்படும் பாத்திரம்
  6. புளியாணம் (பழைய தஞ்சை மாவட்டங்களில்) - (புளி) ரசம்
  7. ஆனம் - மீன் ஆனம் =மீன் குழம்பு
  8. தாளிச்சா - அநேகமாய் திருமண விருந்துகளில் இவை கொடுக்கப்படுகிறது. உருளைகிழங்குடன், கத்தரிக்காய், தக்காளி, மற்றும் பல காய்கறிகளுடன் ஆட்டு ஈரல் சேர்ந்து வைக்கப்படும் ருசிமிக்க குழம்பு.
  9. ஐந்து-கறி-சோறு - கத்தரிக்காய் பச்சடி, உருளைக்கிழங்கு (ஆட்டு ஈரலுடன்), இனிப்பு, ரசம் அத்துடன இறைச்சி ஆகிய ஐந்து தனித்தனி வகைகளின் கலவையையே ஐந்து கறிசோறு என்று அழைக்கிறார்கள்,
  10. மாசி - காயவைக்கப்பட்ட ஒருவகை மீன், இதனை தூள் செய்து, அத்துடன் மிளகாய் பொடி சேர்த்து தூளாக்கி, வெங்காயம், எழுமிச்சை சேர்த்து ரசம்+சோற்றுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இவை பெரும்பாலும் நோன்புக்காலங்களில் பயன்படுத்துவார்கள். இவ்வகை உணவு மலேசியா, மாலத்தீவுகளிலிருந்து வருகிறது.
  11. சகன், ஸஹன் - நால்வர் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட உபயோகிக்கும் அகலமான பாத்திரம். பரங்கிப்பேட்டை, அதிராம்பட்டிணம், நாகூர், முத்துப்பேட்டை, மல்லிப்பட்டிணம் போன்ற ஊர்களில் திருமண விருந்துகளில் இந்த முறையைப் பார்க்கலாம்.
  12. பீர்னீ (பரங்கிப்பேட்டை) - ரவை கஞ்சி (இனிப்பு)
  13. நோன்பு கஞ்சி - ரமலான் மாதாத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்று அதனை நிறைவெற்றிய பிறகு உண்ணப்படும் அரிசி, ஆட்டு இறைச்சி, காய்கறி மற்றும் இதர பொருள்களை சேர்த்து செய்யப்படும் ஒரு வகை உணவு

நிறுவனங்கள்[தொகு]

  1. மதரஸா - இஸ்லாமிய கல்லூரி, இங்கு இஸ்லாமிய பாடத்திட்டங்கள், குர்ஆன் மனனம் செய்தல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகிறது.
  2. எதீம் கானா - அநாதை இல்லம்.
  3. பைத்துல் மால் - பொது நிதியகம், பொதுமக்களிடம் ஜகாத், போன்றவற்றை, வசூல் செய்து ஏழைகளுக்கு விநியோகிக்கும் ஸ்தாபனம். பார்க்க அதிரை பைத்துல்மால்
  4. ஜமாஅத் - கூட்டமைப்பு
  5. மஹல்லா - பகுதி
  6. மக்தப் - சிறுவர், சிறுமியருக்கு திருக்குர்ஆன் ஓத கற்றுக் கொடுக்கப்படும் இடம்

விளிச்சொற்கள்[தொகு]

  1. சபூர் செய் - பொறுமை காத்திரு, பொறுமையாய் இரு, ஒருவர் துன்பத்திலிருக்கும் பொழுது, (ஆறுதலுக்காக) சொல்லப்படுவது.
  2. துஆ செய் (இலங்கைத் தமிழ்: துவா)- எனக்காக பிரார்த்தனை செய்
  3. நிய்யத் வை - (நல்லவற்றிற்காக, தூய எண்ணத்துடன்) உறுதி எடுத்துக்கொள்

பொதுவான சொற்கள்[தொகு]

  1. நfப்ஸ் - மன இச்சை, ஆசை. நப்ஸை கட்டுப்படுத்திக்கொள்- ஆசையை கட்டுப்படுத்திக்கொள்.
  2. பொஸ்ப், நஸீப் (பரங்கிப்பேட்டை)- கொடுப்பினை. அவனுக்கு பொஸ்ப் இருந்திருக்கிறது, இந்த பிரியாணி சாப்பிடுவதற்கு. (இந்த வார்த்தை எதிர்பாராதவிதமாக விருந்து ஏற்பாடு செய்து அப்பொழுது திடீரென நண்பர் ஒருவர் அங்குவரும் பொழுது அவரைப் பார்த்து சொல்லப்படுதல்)
  3. ஹக் - பங்கு, அவனுடைய ஹக்கை கொடுத்துவிடு (அவனுடைய பங்கை கொடுத்துவிடு), நம்பிக்கை (ஆண்டவன் மீது ஹக் இருக்கனும்)
  4. ராஹத் - ராஹத்தாய் இருக்கிறது(பழைய தஞ்சை மாவட்டங்களில்) - காற்றோட்டமாய் இருக்கிறது, இதமாக இருக்கிறது.
  5. மிஸ்கீன், முசாபர் (அரபி) - வழிப்போக்கர், பிச்சை எடுப்பவர்.
  6. தீதார் - மரணமடைந்தவரை கடைசியாக பார்ப்பது
  7. கண்டுக்குட்டு வருதல் - இறந்தவர் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரிக்குதல்

திருமணம்[தொகு]

  1. நிக்காஹ் - திருமணம், ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் தாம்பத்ய, வாழ்வியல் ஒப்பந்தம்.
  2. வலிமா - திருமண விருந்து, மணமகன் அவரின் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு திருமணத்தை முன்னிட்டு கட்டாயம் அளிக்க வேண்டிய விருந்து.
  3. மஹர் - தங்கம் அல்லது பணமாக மணமகன் மணமகளுக்கு கொடுக்கும் திருமண அன்பளிப்பு. மணமுறிவு ஏற்படும் விடத்து இதனை மணமகன் திருப்பி கேட்க கூடாது என்று வழியுறுத்தப்படுகிறது, அது மலையளவாகினும் சரியே.
  4. தலாக் - விவாகரத்து, மணமுறிவு.
  5. இத்தா - விவாகரத்துப் பெற்ற பெண் அல்லது கணவனை இழந்த இஸ்லாமிய பெண் குறிப்பிட்ட காலம் மறு திருமணம் செய்யாமல் காத்திருக்கும் இடைக்காலத்தைக் குறிக்கின்றது. கணவன் இறந்துவிட்டாலோ, கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்டாலோ மனைவி கர்ப்பமா இருக்கிறாளா, இல்லையா என்பதை அறிய இத்தகைய இடைக்கால காத்திருப்பு காலம் பயன்படுகிறது.
  6. கத்னா செய்தல், சுன்னத் கல்யாணம் - ஆண் பிள்ளைக்கு ஆணுறுப்பில் உள்ள அதிகப்படியான தோலை வெட்டுதல்.
  7. குலா - பெண் விரும்பி கேட்கும் திருமணமுறிவு

சோகம், துக்கம்[தொகு]

  1. இன்னாலில்லாஹி (வ இன்னா இலைஹி ராஜிஊன்) - கடவுளிடமிருந்தே வந்தோம் அவனிடமே செல்ல இருக்கிறோம். ஒருவரின் இறந்த செய்தி அல்லது பொருட்கள் காணாமல் போகும் விடத்து இந்த வாக்கியம் சொல்லப்படுகிறது.
  2. ஜனாஸா, மய்யித்து - இறந்தவரது உடல்.
  3. வஃபாத் - வஃபாத்தாகிவிட்டார்கள், இறந்துவிட்டார்கள்
  4. கஃபன் - இறந்தவரது உடலை கட்ட பயன்படும் (வெள்ளைத்) துணி.
  5. கப்ர் - இறந்தவர் புதைக்கப்பட்டிருக்கும் இடம்.
  6. கப்ருஸ்தான்,மையவாடி (அதிராம்பட்டிணம்), அடக்கஸ்தலம் - இறந்தவர்கள் புதைக்க உபயோகிக்கும் இடம்.
  7. சந்தாக் - இறந்தவர்களை தூக்கிச்செல்ல பயன்படுத்தப்படும் பாடை.

வெளி இணைப்புகள்[தொகு]

அன்புடன் குழுமத்தில் ஒரு உரையாடல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்லிம்_தமிழ்&oldid=3453410" இலிருந்து மீள்விக்கப்பட்டது