முலாயம் சிங் யாதவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முலாயம் சிங் யாதவ் (நவம்பர் 22, 1939 ) உத்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னால் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் உத்திரப்பிரதேசத்தின் எடாவா (Etawah) மாவட்டத்திலுள்ள சைபை (Saifai) கிராமத்தில் பிறந்தார். இவர் பயிற்சிபெற்ற ஆசிரியரும் மல்யுத்த வீரரும் ஆவார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மாலதி தேவி 2003 ல் இறந்துவிட்டார், இவர்களுக்கு பிறந்த மகன் அகிலேஷ் யாதவ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இரண்டாவது மனைவி சாதனா அதிகம் அறியப்படாதவர். இவர்களுக்கு 5 வயதில் பிரதிக் என்ற மகன் உள்ளார்.
இவர் மூன்று முறை உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். ஒரு முறை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்துள்ளார்.
| இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |