முருகன் இட்லி கடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முருகன் இட்லி கடை, பெசன்ட் நகர், சென்னை, இந்தியா

முருகன் இட்லி கடை மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும், தமிழ்நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட ஓர் உணவகம். இது இட்லிக் கடை என்ற பெயரைக் கொண்டிருப்பினும், இங்கே இட்லி தவிர சர்க்கரைப் பொங்கலும், ஊத்தப்பமும் கிடைக்கும். இந்த உணவு விடுதிக்கு, மதுரையில் உள்ள மூன்று கடைகளைத் தவிர, சென்னையில் பத்து கிளைகளும் சிங்கப்பூரில் இரண்டு கிளைகளும் உள்ளன.1991ஆம் ஆண்டு, தமது பெற்றோர்கள் நடத்தி வந்த முருகன் காபி நிலையம் என்ற உணவகத்திற்கு பொறுப்பேற்ற எசு.மனோகரன், இதனை முற்றிலும் புதிதாக வடிவமைத்து துவங்கினார்.[1]. 1990களில் இக்கடை தாக்கப்பட்டதால் வழக்கு ஒன்று பதிவாகி சர்ச்சை உருவானது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Murugan and the idli factory
  2. "Legal notice to Sun TV". Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2011-04-01.
  3. Azhagiri sends legal notice to Sun TV[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகன்_இட்லி_கடை&oldid=3568174" இலிருந்து மீள்விக்கப்பட்டது