முதலாம் மர்வான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முதலாம் மர்வான் | |
|---|---|
| உமய்யா கலீபா | |
| ஆட்சிக்காலம் | 684 – 685 |
| முழுப்பெயர் | மர்வான் இப்னு அல்-ஹக்கீம் |
| பிறப்பு | மார்ச் 28, 623 |
| இறப்பு | மே 7, 685 |
| முன்னிருந்தவர் | இரண்டாம் முஆவியா |
| பின்வந்தவர் | அப்துல் மாலிக் |
| அரச வம்சம் | உமய்யா கலீபகம் |
| தந்தை | அல் ஃகாகம் இப்னு அபு அல்-ஆசு |
முதலாம் மர்வான் (Marwan I, அரபி:مروان بن الحكم) உமைய்யா கலீபகத்தின் நான்காவது கலீபா ஆவார். முன்னிருந்த இரண்டாம் முஆவியா, வாரிசுகள் இல்லாத நிலையில் ஆட்சி அதிகாரத்தை துறந்ததை அடுத்து இவர் நான்காவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப் பட்டார். இதன் மூலம் உமைய்யா வம்சத்தின் அபூ சுபியான் கிழையின் நேரடி ஆட்சி முடிந்து, அதே வம்சத்தின் ஃகாகம் கிழையின் ஆட்சி தொடங்கியது. இவரின் ஆட்சி காலம் உள்நாட்டு குழப்பங்கள் மிகுந்தாதாக இருந்தது. மேலும் அப்துல்லா இப்னு சுபைரின் ஆக்கிரமிப்புகளும் அதிக அளவில் இருந்தது.