மின்னியலின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மின்னியல் வரலாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மின்னியலின் வரலாறு பண்டைய கிரேக்கர்களின் காலத்தை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை உள்ளடக்கியதாகும்.

6 ஆம் நூற்றாண்டு[தொகு]

மின்சாரம் கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் தேல்சு என்ற தத்துவவியலாளரின் குறிப்பின் மூலம் நாம் இதை அறியலாம். தேல்சு அவர் மாணவர்களுக்கு இச்சோதனையை நடத்திக்காட்டுவாராம். அவர் அம்பரைக் கம்பளியால் நன்கு தேய்ப்பார், அப்பொழுது அம்பரிருந்து 'கிரிக் கிரிக்' என்ற சத்தம் எழும், பின்பு அவர் அம்பரை குவிக்கப்பட்டுள்ள சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வைக்கோல் அல்லது மர இழைகள் மீது ஒரு செமீ மேல் பிடிப்பார், அப்போது வைக்கோல் அல்லது மர இழைகள் அம்பரை நோக்கித் துள்ளும். இருட்டான அறையில் இச்சோதனையை நடத்தினால், சில நேரங்களில் அம்பரில் இருந்து தீப்பொறிகள் எழும். இலத்தீனில் அம்பரை எலக்டிரான் என்றழைப்பர். இச்சொல்லே திரிந்து மின்சாரத்தை ஆங்கிலத்தில் "எலட்டிரிசிட்டி" என அழைக்கின்றனர். தேல்சு கண்டுபிடித்த மின்சக்தியை நாம் இப்பொழுது நிலை மின்சக்தி என அழைக்கிறோம்.

பாக்தாது மின்கலம்[தொகு]

காந்த விசை கண்டுபிடிப்பு[தொகு]

மின்தேக்கி கண்டுபிடிப்பு[தொகு]

மின்கலம் கண்டுபிடிப்பு[தொகு]

மின்னியலின் தந்தை பாரடே[தொகு]

மைக்கேல் பாரடேயை "மின்னியலின் தந்தை" என்றுரைத்தால் மிகையாகாது. இவர் நடத்திய ஆராய்ச்சிகள் ஏராளம், கண்டுபிடித்தவையும் ஏராளம். ஒரு மின்சுருளைச் சுற்றியுள்ள பகுதியில் காந்த அலைகள் வேறுபட்டால் அவ் மின்சுருளில் மின்சாரம் உண்டாகும் எனக் கண்டுபிடித்தார். இதுவே மின் உற்பத்தி இயந்திரம் இயங்குவதற்கான அடிப்படைக் கொள்கையாகும்.

தெசுலா / எடிசன் காலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னியலின்_வரலாறு&oldid=2916521" இலிருந்து மீள்விக்கப்பட்டது