மாவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாவூர் என்னும் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. [1] மாவூர் என்னும் பெயரில் வேறு சில இடங்களிலும் ஊர்கள் உள்ளன. 18 ஆம் நூற்றாண்டில் இவ்வூரில் வாழ்ந்த கறுப்பண்ணன் என்னும் புரவலர் சொக்கநாதப் புலவரைப் பேணித் தமிழ் வளத்தவர். இந்நதப் புலவர் இந்தக் கறுப்பண்ணனைப் பாடிய பாடிய பாடல் ஒன்று தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் உள்ளது. [2] கறுப்பண்ணன் தாய் கஸ்தூரி என்று மற்றொரு பாடல் குறிப்பிடுகிறது. [3] முத்ததையா பாகவதர் என்னும் வீணை இசைக்கலைஞரான முத்தையா பாகவதர் என்பவரும் இவ்வூரில் வாழ்ந்த பெருமகனார். [4]

அடிக்குறிப்பு[தொகு]

  1. இருப்பிடம்
  2. நிணம் போதத் தள்ளிப் பெரும் பூதம் போலப் பின்னேற்று செத்த
    பிணம் போல் கிடந்து புரளுவர் காண் பிறர்க் கீட்டி வைத்த
    பணம் போன பின்பு விவேகம் உண்டாகும் அப்பஞ்சைகள் வங்
    கணம் போதும் போதும் கறுப்பா தென்மா வையிற் காவலனே. (50)
    பக்கம் 86

  3. கண்மணி கஸ்தூரி யீன்ற கறுப்பன் (பாடல் 51)
  4. முத்தையா பாகவதர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவூர்&oldid=3788518" இலிருந்து மீள்விக்கப்பட்டது