மாப்பிளமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலபார் பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் மாப்பிள சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் (1930 களில்)

மாப்பிள அல்லது மாப்பிளமார் என்பது தென் கேரளத்தில் கிறித்தவர்களையும்[1] வடகேரளத்தில் முஸ்லிம்களையும் குறிக்கப் பயன்படும் சொல்.

மாப்பிள்ளைமார் என்ற சொல்லுக்குப் பல விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்று மார்க்கப்பிள்ளை என்ற சொல்லில் இந்த மாப்பிள என்ற சொல் வந்திருக்கலாம் என்பதாகும்.[2] பழங்காலத்தில் கேரளமெங்கிலும் புத்த சமண மதங்கள் தழைத்திருந்தன. மன்னர்களும் புத்த சமண சமயத்தினராய் இருந்ததால் மக்களும் அம்மதத்தைத் தழுவ வேண்டியதாயிற்று.[3] இவ்வாறு புதிதாக மதத்திற்கு வருவோரை மார்க்கப் பிள்ளை என்று அழைப்பதுண்டு. இதே சொல் பின்னாளில் யூத மதம்,[4] கிறித்தவ மதம், இசுலாமிய மதம் ஆகிய மதங்களைத் தழுவியோரையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopaedia of Islam Volume 6 1988, Page 458
  2. പി.കെ. ബാലകൃഷ്ണൻ (2005). ജാതിവ്യവസ്ഥയും കേരള ചരിത്രവും. കറൻറ് ബുക്സ് തൃശൂർ. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:ISBN 81-226-0468-4. 
  3. വി.വി.കെ. വാലത്ത് (1991). കേരളത്തിലെ സ്ഥലനാമചരിത്രങ്ങൾ എറണാകുളം ജില്ല. തൃശ്ശൂർ: കേരള സാഹിത്യ അക്കാദമി. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7690-105-9. 
  4. The Mappila fisherfolk of Kerala: a study in inter-relationship between habitat, technology, economy, society, and culture (1977), P. R. G. Mathur, Anthropological Survey of India, Kerala Historical Society, p. 1
  5. പി.ഒ. പുരുഷോത്തമൻ (2006). ബുദ്ധന്റെ കാല്പാടുകൾ-പഠനം. കേരളം: പ്രൊഫ. വി. ലൈല. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-240-1640-2. 
  6. പി.കെ. മുഹമ്മദ് കുഞ്ഞി (1982). മുസ്ലീമിങ്ങളും കേരള സംസ്കാരവും. തൃശൂർ: കേരള സാഹിത്യ അക്കാദമി. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பிளமார்&oldid=1405934" இலிருந்து மீள்விக்கப்பட்டது