மாணிக் சர்க்கார்
மாணிக் சர்க்கார் (Manik Sarkar,வங்காளம்:মানিক সরকার ;பிறப்பு 1949) ஓர் இந்திய மார்க்சிய அரசியல்வாதியும் திரிபுரா மாநில முதலமைச்சரும் ஆவார்.
1998ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முதலமைச்சராக இருந்து வருகிறார்.சிபிஎம் கட்சியின் உயர்மட்ட அரசியல் மற்றும் கொள்கை வகுக்கும் குழுவான பொலிட்பீரோவின் உறுப்பினர்.[1][2].
இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) தலைவராக பங்காற்றியுள்ளார். திரிபுராவில் சமசிந்தனை உள்ள நட்புக் கட்சிகளுடன் இடது முன்னணிக் கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகிக்கிறார்.[3]
06 மார்ச்சு 2013 அன்று ஆறாவது இடது முன்னணி ஆட்சிக்கு தலைமையேற்று முதல்வராக பொறுப்பேற்றார்.[4] இந்திய முதல்வர்களிலேயே மிகவும் ஏழையான முதல்வர் என்பது இவரது மற்றொரு சிறப்பம்சம். 59 வயதான மாணிக் சர்க்காருக்கு முதல்வர் என்ற முறையில் மாத ஊதியமாக 9,200 ரூபாயும் அலவன்சாக 1,200 ரூபாயும் கிடைக்கிறது. அதை அப்படியே கட்சி்க்குத் தந்துவிடுகிறார். கட்சி தரும் 5,000 ரூபாயில் வாழ்க்கையை நடத்துகிறார். இவருக்கென்று சொந்தமாக வீடோ, நிலமோ கிடையாது. இவரது மனைவி பஞ்சலி பட்டாச்சார்ஜி மத்திய சமூக நலத்துறையில் பணியாற்றுகிறார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ பொலிட்பீரோ உறுப்பினர் பட்டியல் 7வது (1964)காங்கிரசு முதல் 18வது (2005)வரை
- ↑ பொலிட்பீரோ உறுப்பினர்கள் மற்றும் நடுவண் குழு உறுப்பினர்களின் பட்டியல் 19வது காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
- ↑ சிபிஎம் அரசுகள்
- ↑ 7 வது இடதுமுன்னணி அரசு பொறுப்பேற்றது
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் மாணிக் சர்க்கார் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |