மனம் சேர சந்திரஹாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனம் சேர சந்திரஹாசன் சேலத்தில் வாழும் தமிழ் அறிஞர். தலை சிறந்த தமிழ் பேச்சாளர்களில் ஒருவர். திருமுருக கிருபானந்த வாரியாரால் தன் வாரிசு என்று புகழப்பட்டவர். 1975 முதல் மனம் என்னும் அமைப்பைத் தொடங்கி திங்கள் தோறும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமைகளில் பேச்சு மன்றம் நிகழ்த்தி புதிய தமிழ் பேச்சாளர்களுக்கு களம் அமைத்து கொடுத்து வருகிறார். நகைச்சுவை மன்றம் ஒன்றையும் திங்கள் தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனம்_சேர_சந்திரஹாசன்&oldid=580424" இலிருந்து மீள்விக்கப்பட்டது