மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 332.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

தோழி தலைவனுக்குக் கேட்கும்படி தலைவியிடம் சொல்கிறாள்.

வாடைக்காற்று வீசிச் சில தூறல்கள் விழுந்து முடிந்த கடைசி நாளில் தலைவன் தலைவியுடன் உடனிருந்து அவளது பிரிவுத் துன்பத்தைப் போக்கிச் சில ஆறுதல் மொழிகளைச் சொல்லக்கூடாதா என்பது தோழி சொன்ன செய்தி.

  • நாறுயிர் மடப்பிடி = கன்று ஈனப் பெருமூச்சு விடும் பெண்யானை

ஆண்யானை நாறுயிர் மடப்பிடியைத் தழுவிக்கொண்டு செல்லும் குன்றம் கொண்ட மலைகிழவோன் இந்த அகப்பாடலின் தலைவன்.